திருவாரூரில் போட்டியா, இல்லையா.. கமல் கையில் முடிவு.. மக்கள் நீதி மய்யம் தீர்மானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவாரூர் இடைத் தேர்தல் குறித்த இறுதி முடிவினை எடுக்கும் உரிமையை கட்சியின் தலைவரான கமல்ஹாசனிடம் மக்கள் நீதி மய்யம் கொடுத்துள்ளது.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் இடைத் தேர்தல் தொடர்பாகவும், வேட்பாளர் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன் இறுதியில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன் விவரம்:
- நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடிவு செய்திருப்பதால் கட்சியின் மாவட்ட தொகுதி, மற்றும் பகுதி பொறுப்பாளர்களின் தேர்தல் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- திருவாரூர் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண விநியோகம் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
- திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவினை தலைவர் கமல்ஹாசன் அவர்கள் எடுத்திட வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.














Click it and Unblock the Notifications