உழைக்கும் இடத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை - கமல்ஹாசன் டுவிட்...பொங்கியெழுந்த நெட்டிசன்கள்!
சென்னை: தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் இன்று அனுசரிக்கப்டுகிறது. இதனையொட்டி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம் வரைக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது என்று தெரிவித்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு ஆதரவு கருத்துக்களையும், எதிர் கருத்துகளையும் கூறி வருகின்றனர்.
முதலில் உங்கள் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுங்கள். அதன்பிறகு பாதுகாப்பு பற்றி பேசுங்கள்" என ஒரு தரப்பில் இருந்து இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்தை வைத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் இன்று அனுசரிக்கப்டுகிறது. தொழிலாளர்கள் பணியிடங்களில் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

கமல்ஹாசன் டுவிட்
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்.போராடிப் பெற்ற உலகளாவிய உரிமையான 8 மணி நேர வேலை என்பது இந்தியாவில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

பாதுகாப்பற்ற நிலை
உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம் வரைக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலை தொடரலாகாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு ஆதரவு கருத்துக்களையும், எதிர் கருத்துகளையும் கூறி வருகின்றனர். கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தை சுட்டிக்காட்டியுள்ள நெட்டின்சன்கள் பலர் அது தொடர்பாக கருத்து கூறியுள்ளனர்.

நெட்டிசன்கள் கருத்து
''முதலில் உங்கள் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுங்கள். அதன்பிறகு பாதுகாப்பு பற்றி பேசுங்கள்" என ஒரு தரப்பில் இருந்து கருத்து வருகின்றன. ''கமல் சார் உங்களை நம்பிதான் இருக்கிறோம். நீங்கள் வந்துதான் உரிமைகளை மீட்டுத் தர வேண்டும்'' என்று ஒரு தரப்பிலும் கமலுக்கு ஆதரவு கருத்துக்கள் வந்து குவிகின்றன.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications