ஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு
சென்னை: ஒரு செருப்பு வந்துவிட்டது. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
ஒத்த செருப்பு திரைப்படத்தின் படவிழா இன்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசினார். அவர் பேசுகையில் மகாத்மா காந்தியை நான் ஹீரோவாக நினைக்கிறேன். அத்தகைய காந்தி ஒரு முறை ரயிலில் சென்ற போது அவரது ஒத்தசெருப்பு கீழே விழுந்துவிட்டது.

ஒரு செருப்பு
இதையடுத்து ஒற்றை செருப்பை கொண்டு என்ன செய்வது என யோசித்த காந்தி தனது மற்றொரு செருப்பையும் வீசிவிட்டார். அது போல் என் மீது ஒரு செருப்பு வந்துவிழுந்துவிட்டது.

வீசிவிடுங்கள்
மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன். ஒற்றை செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறார். விரைவில் அதையும் வீசிவிட்டால் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

தகுதியானவன் தகுதியானவன்
வாழ்த்துகள் வளர்க்கும் அளவுக்கு தன்னம்பிக்கை நம்மை வளர்க்காது. என் மீது செருப்பு வீசியவருக்குத்தான் அவமானமே தவிர எனக்கு அவமானம் இல்லை. செருப்பு வந்து வீழ்வதற்கு தகுதியானவன் நான் என்றார் கமல்ஹாசன்.

தீவிரவாதி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட பள்ளப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முட்டை வீச்சு
இந்த நிலையில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது மர்ம நபர் செருப்பையும், முட்டையையும் வீசியது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications