சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? கிராம சபை கூட்டம் ரத்து குறித்து 'கமல்' கேள்வி!
சென்னை: தமிழத்தில் இன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை தமிழக அரசு நேற்று திடீரென ரத்து செய்தது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 3 தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் வலிமையானவை ஆகும். ஒரு கிராமத்திற்கு எது தேவை. எது தேவையில்லை என்பதே அவர்களே முடிவு செய்து தீர்மானம் போட முடியும்.

அத்துடன் ஒவ்வொரு கிராமத்திலும் அந்த ஆண்டுகளில் திட்டங்களுக்கு செய்த செலவு கணக்கை மக்களுக்கு பொதுவெளியில் சொல்லியாக வேண்டும். அதேபோல் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அங்கே குரல் எழுப்பி அதற்கு மக்கள் பதிலும் பெற முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா அச்சம் காரணமாக தமிழத்தில் இன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை தமிழக அரசு நேற்று திடீரென ரத்து செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன ? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? கொரோனா கால செலவு கணக்கை ? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவந்துவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை நமதே" என்று கூறியுள்ளார்.
இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வேளாண் சட்டத்துக்கு எதிராக ஊராட்சி தலைவர்கள் அனைவரும் திரண்டஅச்சதால் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பதாகவும், அதிமுக அரசின் ஜனநாயக விரோத போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். திட்டமிட்டபடி ஊராட்சி தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள் என்றும முக ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications