போட்டிருக்கிறது ஸ்விக்கி உடை.. டெலிவரி செய்தது பிரியாணியில்லை.. கஞ்சா.. சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஸ்விக்கி டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைனில் ஸ்விக்கி உணவு டெலிவரியில் வேலை செய்வது போல் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்சுவிகி நிறுவனத்தில் பணிபுரிவது போல் உடை அணிந்து கொண்டு ஒருவர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

தாழம்பூர் காவல் நிலைய போலீஸார்
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கைது செய்து தாழம்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான பிரகாஷ்குமார் சேனாபதி என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பைக் பறிமுதல்
கஞ்சா விற்பதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதே போல் இன்னும் வேறு யாரெல்லாம் இது போல் உணவு டெலிவரி நிறுவனத்தின் பெயரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து பிரகாஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ரேவ் பார்ட்டி
கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் அங்கிருக்கும் ரிசார்ட்களில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை பார்ட்டியும் விருப்பப்பட்ட பெண்களை அழைத்து சென்று நெருக்கமாக இருக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

கஞ்சா சப்ளை
இதற்கென தனி நெட்வொர்க்கே இயங்குவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை மாநகரின் உள்ளேயும் சில கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு கூட கஞ்சா சப்ளை செய்யும் சம்பவங்களையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இன்னும் சில சமூக விரோதிகள், வீட்டுக்குள்ளேயே கஞ்சா செடி வளர்த்து வருகிறார்கள். இவையெல்லாம் சட்டவிரோதம் என தெரிந்தே இது போல் செயல்படும் நபர்களுக்கும் வருங்கால இளைஞர்களை தள்ளாட்டில் வைத்திருக்க முயலும் நபர்களுக்கும் காவல் துறை உரிய தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாகும்.
-
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications