இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்!
அமெரிக்கா - ஈரான் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, லெபனான் மீது இஸ்ரேல் சுமார் 84 முறை தாக்கி போர் நிறுத்தத்தை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பம் முதல் எதிர்த்து வருவது மட்டும் அல்லாமல் ஈரானை தாக்கி அழிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளது.
இந்த நிலையில் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மத்திய கிழக்கு பகுதியில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, இஸ்ரேல் லெபனானில் 84 முறை போர் நிறுத்தத்தை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினால், அதற்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நெதன்யாகுவை விமர்சனம்
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்துள்ளார். லெபனானில் இஸ்ரேல் சிறிதேனும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இது இஸ்ரேல் - அமெரிக்க உறவுகளில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அமைதி ஒப்பந்தம் ஏற்காதது குறித்து டிரம்ப் நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தெற்கு லெபனான்
இஸ்ரேல் தெற்கு லெபனானில் தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யும் என்று இராணுவ ஆய்வாளர் வொல்ப்காங் புஸ்டாய் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுக்கும் என்றும், ஆனால் அதே நேரத்தில் தனது மக்கள் தினசரி தாக்குதலுக்கு உள்ளாக விரும்பாது என்றும் அவர் கூறினார்.
ஹார்முஸ் நீரிணை
ஈரானின் பதிலடி எப்படி இருக்கும் என்பது, ஹார்முஸ் நீரிணை அதன் பொருளாதாரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பொறுத்தது என்று புஸ்டாய் குறிப்பிட்டார்.
தற்போதைய அமெரிக்க - ஈரான் ஒப்பந்தம், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க டிரம்ப் எடுத்துள்ள முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலைமை, மத்திய கிழக்கு பகுதியில் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி அமையும் என்பதைப் பொறுத்து, உலக அரசியல் மற்றும் எண்ணெய் விலைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பதிலடி எச்சரிக்கை
லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்தால், அதற்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தெற்கு லெபனானில் தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்த முயற்சிக்கும் என்றும், அதற்கு ஏற்ப ஈரான் எப்படி பதிலளிக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டும் என்றும் ராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
-
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications