திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.. விரைவில் பேச்சுவார்த்தை குழு! கனிமொழி
ராமநாதபுரம்: திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில் இதற்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தனி நபர் பேசுவதற்கு எல்லாம் ஒரு கட்சி பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என கனிமொழி கூறியுள்ளார்.
மேலும் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க விரைவில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்றும் கனிமொழி எம்பி கூறியிருக்கிறார்.

திமுக தலைமையிலான கூட்டணி
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து கட்சி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் கட்சியான திமுக இந்த முறையும் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது.
இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, கூட்டணியில் ராமதாஸை இணைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பேசப்பட்ட்டது.
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்
இதேபோல் தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைய இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் அடுத்தகட்டமாக திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக காங்கிரஸ் சார்பில் கிரிஷ் சோடங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக இதுவரை அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.
ஏற்கனவே காங்கிரசில் உள்ளவர்கள் ஆட்சியில் பங்கு, 40 தொகுதிகள் வேண்டும் என்று பேசி வருவதும், திமுகவையே ஒரு சில தலைவர்கள் குறை சொல்வதும் திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருப்பதாகவும், ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை திமுக தலைமை நேரடியாக சொல்லாவிட்டாலும் அமைச்சர்கள் அவ்வப்போது பேசி வருகிறார்கள்.
கனிமொழி எம்பி பதிலடி
இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, திமுக காங்கிரசில் தான் விரிசல் விழுந்து இருக்கிறது என்று விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் திமுக காங்கிரஸ் தலைவர்கள் இடையே இணக்கமான உறவு நீடித்து வருகிறது என்றும், விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது:- கடந்த தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 400-க்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு எதிராக செயல்படுவதால் சில வாக்குறுதிகள் மட்டுமே செயல்படுத்த முடியாத நிலை நிலவுகின்றது.
விரைவில் பேச்சுவார்த்தைக் குழு
திமுக தலைமைக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே இணக்கமான நல்லுறவு இருந்து வருகிறது. தேர்தலில் திமுக - காங்கிரஸ் இணைந்து செயல்படும். தனி நபர் பேசுவதற்கு எல்லாம் ஒரு கட்சி பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. விரைவில் பேச்சுவார்த்தைக் குழுவானது அமைக்கப்படும். திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று அவர் கூறினார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
Khushbu Sundar: தவெகவுக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? குஷ்பு தடாலடி கேள்வி! -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி












Click it and Unblock the Notifications