முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டி.. தூத்துக்குடியில் வெற்றி முத்தை அள்ளி வருவாரா கனிமொழி!
சென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதியின் வேட்பாளராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக அவர் தேர்தல் களத்தில் நிறுத்தப்படுகிறார்.
லோக்சபா தேர்தலில் முதல்முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக 2007-ஆம் ஆண்டு இவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கருணாநிதிக்கும் ராசாத்தி அம்மாளுக்கும் மகளாக கடந்த 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி பிறந்தவர் கனிமொழி. இவர் தந்தையை போல் இலக்கிய ஞானம் பெற்றவர்.

பணி
சர்ச் பார்க் பள்ளியில் படித்த கனிமொழி எத்திராஜ் கல்லூரியில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். திமுக மகளிரணித் தலைவராக உள்ள கனிமொழி, அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தி இந்து, குங்குமம், சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் செய்தித்தாளான தமிழ் முரசு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

பேரவைத் தலைவர்
ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.

குற்றப்பத்திரிகை
இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்ற கலை, பண்பாட்டு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவரது பெயர் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தது.

திகார் சிறை
இதையடுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கவிதை படைப்பு
இதில் கனிமொழி, ஆ. ராசா உள்பட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய கவிதைகளை இவர் எழுதியுள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications