மாற்று திறனாளிகளை மனிதர்களாக மதித்தாலே போதும்.. கனிமொழி பேச்சு
மாற்று திறனாளிகளை மனிதர்களாக மதித்தால் போதும்.. கனிமொழி
சென்னை: "மாற்று திறனாளிகளை கடவுளின் குழந்தையாக மதிக்க தேவையில்லை.. அவர்களை முதலில் மனிதர்களாக மதித்தாலே போதும்" என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
சென்னையில் 'மாற்றுத்திறனாளிகள் அரசியல் மாநாடு' நடைபெற்றது. டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: "மாற்றுத் திறனாளிகளுக்காக பல நல்ல திட்டங்களை திமுக நிறைவேற்றி தந்துள்ளது. அவர்களுக்கு கருணையையும் தாண்டி, உரிமைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை.

கோயிலுக்குள் விடுவதில்லை
எவ்வளவுதான் போராட்டங்கள் நடத்தினாலும் அதை யாரும் கண்டுகொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மாற்றுத் திறனாளிகள் கடவுளின் குழந்தைகள் என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால் கோயில்களுக்குள் விடுவதில்லை. ஏனென்றால், காலில் ‘காலிபர்' சாதனம் போட்டிருக்கிறார்கள் என்பதால்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு பல கோவில்களில் அனுமதி வழங்குவதில்லை.

மனிதர்களாக மதிக்க வேண்டும்
கடவுளின் குழந்தைகள் என்கிறார்கள் என்றால், கடவுளை காணக்கூட இவர்களுக்கு உரிமை இல்லையா? இதற்கு கடவுளின் குழந்தை என்றெல்லாம் அழைக்கவே தேவையில்லை, அவர்களை மனிதர்களாக மதித்தால் போதும். மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும்" என்றார்.

திமுக திட்டங்கள்
இதேபோல, மாற்று திறனாளிகள் நலனுக்காக திமுக கொண்டுவந்த திட்டங்கள் குறித்து தம்முடன் விவாதிக்க கனிமொழி தயாரா என அமைச்சர் சரோஜா கேள்வியெழுப்பி இருந்தார். இதுகுறித்து கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மனசாட்சி சொல்லும்
அதற்கு பதிலளித்த கனிமொழி, "அமைச்சருக்கு நான் பதில் சொல்வதை விட தெருவில் போராடி கொண்டிருக்கும் மாற்று திறனாளிகளின் போராட்டமே பதில் சொல்லும், இதுவரைக்கும் மாற்றுத் திறனாளிகளை கூப்பிட்டு இவர் பேசியிருப்பாரா? ஏதாவது ஒரு பிரச்சனையை இதுவரைக்கும் தீர்த்து இருப்பாரா? என்பதை அவர்களின் மனசாட்சியே இதற்கு பதில் சொல்லும்"என்றார்.
-
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் -
‘மெடிக்கல் மினிஸ்டர்' பதவி தர மறுத்த கருணாநிதி? எம்.ஜி.ஆர் கிளப்பிய ஊழல் புகார்.. உடைந்த திமுக! -
மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?! -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications