உக்ரைனில் உக்கிரமான போர்.. ட்விட்டரில் வந்த கோரிக்கை.. நடவடிக்கை எடுத்த கனிமொழி!
சென்னை: உக்ரைன் லிவிவ் நகரில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் நிலையை அறிந்த திமுக எம்பி கனிமொழி அவர்களுக்கு உதவுவதாகவும் மாணவர்களின் விவரங்களை தருமாறும் கேட்டு ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் ரஷ்யா போரிட்டு வருகிறது. இன்று 9ஆவது நாளாக இந்த போர் மூர்க்கத்தனமாக நடந்துள்ளது. உக்ரைனில் உள்ள நீர் மின்நிலையம், விமான நிலையம், முக்கிய கட்டடங்களை ரஷ்யா அழித்து வருகிறது.
உக்ரைனுக்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை சப்ளை செய்துள்ளன. உக்ரைன் ராணுவமும் ரஷ்யாவுக்கு தீரமிக்கதொரு பதிலடியை கொடுத்து வருகிறது. உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்காக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அங்கு தங்கி பயின்று வருகிறார்கள்.

உக்ரைன்
உக்ரைனில் ஆங்காங்கே குண்டு மழை பொழிவதால் பதுங்கு குழிகளில் உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மீட்கப்பட்டு வரும் போதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் செய்வதறியாது தத்தளித்து வருகிறார்கள்.

உணவு வாங்க முடியாமல் தவிப்பு
உணவு வாங்க வெளியே சென்ற கர்நாடகா மாணவர் ஒருவர் ரஷ்ய தாக்குதலில் கடந்த சில நாள்களுக்கு முன் பலியானார். இதனால் பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இந்திய மாணவர்கள் உள்ளனர். ஒரே பதுங்குகுழியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அங்கு மூச்சுவிட முடியாமல் சிரமத்தை சந்திக்கிறார்கள். ஒரே கழிப்பறையை அனைவரும் பயன்படுத்தும் நிலை உள்ளது.

துன்பங்கள்
இவ்வாறு பல துன்பங்களை அனுபவிக்கும் இந்திய மாணவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தங்களை யாராவது மீட்பார்களா என எதிர்நோக்கி காத்துக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் உக்ரைனில் லிவில் நகரில் தமிழக மாணவர்கள் ஏராளமானோர் சிக்கித் தவிப்பதாக திமுக எம்பி கனிமொழிக்கு அங்கிருந்து தகவல் கிடைத்தது. யாரோ சிலர் இந்திய அதிகாரிகள் என கூறிக் கொண்டு ஐடி கார்டு இல்லாமல் வந்து மாணவர்களை எல்லைக்கு கொண்டு செல்வதாக அழைப்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளதாக ட்விட்டரில் வானதி சேதுபதி என்பவருக்கு வந்த புகாரை திமுக கனிமொழி எம்பிக்கு அனுப்பியிருந்தார்.

உதவ முன் வந்த கனிமொழி
அதில் இந்த மாணவர்களுக்கு உதவ முடியுமா என்றும் அந்த மருத்துவர் கேட்டிருந்தார். இதையடுத்து கனிமொழி எம்பி அந்த மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட தான் தயாராக இருப்பதாகவும் உடனடியாக அந்த மாணவர்களின் விபரங்களைத் தருமாறும் டிவீட் செய்திருக்கிறார். இதற்கு டாக்டர் வானதி சேதுபதி நன்றி தெரிவித்து மாணவர்களின் வாட்ஸ் ஆப் எண்களையும் உக்ரைன் எண்ணையும் அனுப்பியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications