தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு சிக்கலா? 2 வாரங்களில் பதில் வேண்டும்.. ஹைகோர்ட் நோட்டீஸ்
Recommended Video
சென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதி எம்.பி.யான கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விளக்கம் கேட்டு, ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
17வது லோக்சபாவுக்கு கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை, 7 கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் வேலூர் தவிர்த்து பிற 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 37 தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது. தேனி லோக்சபா தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

விஐபி மோதல்
இந்த தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றது. இதற்கு முக்கிய காரணம், அந்த தொகுதியில், பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், திமுக மகளிரணி தலைவர் கனிமொழி ஆகிய இருவரும் களமிறங்கியதுதான்.

கனிமொழி வெற்றி
அனல் பறந்த போட்டியில், கனிமொழி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றார். ஆனால், இப்போது இந்த வெற்றிக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திடீர் வழக்கு
வசந்தகுமார் தாக்கல் செய்த மனுவில், லோக்சபாத் தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் முழுமையான விவரங்கள் இல்லை என்றும், முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2 வாரங்கள்
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி, இந்திய தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் எந்த மாதிரி தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், தற்போது, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications