உயிரோடு எரிங்கள் என்றார்.. தேடுறேன்.. என்ன கரு.பழனியப்பன் இப்படி பேச ஆரம்பிச்சிட்டாரே!
சென்னை: திமுக கூட்டணிக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக ஒரே ஜீப்பில் கரு.பழனியப்பன் சென்ற போட்டோ வைரலாகியிருந்தது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் போட்டியிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் பங்கேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தனது உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான, விமர்சனங்களை முன்வைத்தார். அவரது பேச்சின் முக்கிய அம்சங்களை இங்கே பாருங்கள்:
பண மதிப்பிழப்பு ஒரு காமெடி. பணப்புழக்கம் கொண்டு வந்தபோது, நாட்டில் புழக்கத்தில் இருந்த பணம் ரூ.15,44000 கோடி. ஆனால், 6 மாதம் கழித்து ரிசர்வ் வங்கிக்கு 15.28000 கோடி ரூபாய் திரும்பிவிட்டது. 99.3 % பணம் மறுபடியும் வந்துள்ளது. கணக்கில் வராத பணம் 16000 கோடி ரூபாய் மட்டும்தான் வெளியில் இருக்கிறது. புது 500 ரூபாய் நோட்டும் 2000 ரூபாய் நோட்டும் அச்சடிப்பதற்கு ஆகிய செலவு 21000 கோடி ரூபாய்.
பண மதிப்பிழப்புக்கு பிறகு, 50 நாட்களில் எல்லாம் சரி செய்யப்படும், 6 மாதத்தில் இந்தியாவை சொர்க்க பூமியாக மாற்றுவேன், இல்லையென்றால் என்னை உயிரோடு எரியுங்கள் என்றார் பிரதமர். நானும் தேடிக்கிட்டே இருக்கேன் அவர் நாட்டில் இருக்கவே மாட்டெங்குறார். ரபேல் ஊழல் மட்டும் ஊழல் இல்லை. நமது பணம் 21000 கோடியை ஊதாரித் தனமாக செலவு செய்ததும் ஊழல்தான். இவ்வாறு கரு.பழனியப்பன் தெரிவித்தார். இதனிடையே, உயிரோடு எரிங்கள் என்ற சொல்லாடலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் இந்த பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications