கருணாநிதி என் ரோல் மாடல்.. கரூர் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பு.. ஆங்கில ஊடகத்திடம் மனம் திறந்த விஜய்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறிய தவெக அதிமுகவையும் விமர்சிக்க தொடங்கியுள்ளது. தவெக விஜய் நேற்று ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விஜய் மௌனம் கலைத்துள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ரோல் மாடல் என்றும் விஜய் குறிப்பிட்டு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று பிரபல ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யார் ரோல் மாடல்
அப்போது அந்த ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த விஜய், "அரசியலில் வர வேண்டும் என்று நீண்ட காலமாகவே திட்டமிட்டு வந்தேன். இது திடீர் முடிவு இல்லை. அரசியலில் எனக்கு எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தான் எனக்கு ரோல் மாடல். 33 வருட திரை வாழ்க்கையை விட்டு வருவது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் கிங் மேக்கராக இல்லாமல், கிங்காக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
கரூர் சம்பவம் எதிர்பாராத நிகழ்வு. அந்த துயர நிகழ்வு இன்று வரை மிகவும் பாதித்து வருகிறது. நடந்ததை புரிந்து கொள்ள அதிக நேரம் தேவைப்பட்டது. நான் உடனடியாக பதில் அளிக்கவில்லை என்பதற்காக பேசவில்லை என்று அர்த்தம் இல்லை. எனக்கு ஜனநாயகன் படத்திற்கு பிரச்சனைகள், தடைகள் வரும் என்பது ஏற்கனவே அறிந்ததுதான். இதனால் படத்தின் தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
சினிமாவை விட்டாச்சு
அரசியலில் இறங்கினால் திரை வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை நன்கறிவேன். இதற்கான முன்னதாகவே மனதளவில் திடப்படுத்தி கொண்டேன். நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதில் என்ற குழப்பம் இல்லை. முடிவு எடுத்து சினிமாவை விட்டு வந்துவிட்டேன். அரசியல் தான் என் எதிர்காலம். தேர்தலில் வெற்றி பெறும் எண்ணத்துடன் அரசியலுக்கு வந்துள்ளேன். என் ரசிகர்கள் அரசியல் களப்பணியாளர்களாக மாறுவார்கள்.
என் தந்தை இயக்குநர். அவர் மூலம் உலகை அருகில் இருந்து பார்த்துள்ளேன். என்னுடைய அரசியல் நீண்ட காலமாக தொடரும்' என்றார். விஜய் வலது சாரியா.. இடது சாரியா.. அல்லது மத்திய பாதையா என்று எழுப்பிய கேள்விக்கு, "இடது வலது என்பதை கடந்து மக்களின் பிரச்சனைகள் தான் முக்கியம். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க முயற்சி செய்வதே என் அரசியல்" என்று பதில் அளித்தார்.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..












Click it and Unblock the Notifications