கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சிகள் என கூறி யூடியூபர் மாரிதாஸ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை.
இதுகுறித்து அந்த வீடியோவை வெளியிட்ட மாரிதாஸ் பதிவில் கூறியிருப்பதாவது: "முக்கிய தகவல்: கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்பட்டுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும், அவர் வண்டியில் இருந்த கேமரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.
இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை, விஜய் கூட்டத்தில் வரும் போதும், மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை.
பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரணைக்கு." இவ்வாறு மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி மாரிதாஸ் போட்ட பதிவை அடிப்படையாக கொண்டு போடப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை எங்களுக்கு தெரியவில்லை.












Click it and Unblock the Notifications