விஜய் பிரச்சாரத்தின் போது அடிக்கடி ஆம்புலன்ஸ்கள் வந்தது ஏன்? தமிழக அரசு கொடுத்த விளக்கம்!
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ்கள் வந்தது ஏன் என்பது தொடர்பாக ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் மற்றும் சுகாதாரத்துறை செயலர் செந்தில் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். தவெக கட்சியினரே 7 ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்திருந்ததாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தது தமிழ்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கூட்ட நெரிசலுக்கு ஆம்புலன்ஸ்கள் வந்ததே காரணம் என்று ஒரு தரப்பு பேசி வந்தது.

அதேபோல் போலீசார் முறையாக பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும், தவெக பிரச்சாரத்திற்கு அளிக்கப்பட்ட இடம் போதுமானதல்ல என்றும், கேட்ட இடத்தை கொடுத்திருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என்றும் தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஊடக வீடியோக்கள் மூலமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறை செயலர் அமுதா ஐஏஎஸ், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சுகாதாரத்துறை செயலர் செந்தில் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். இதில் விஜய் பிரச்சாரத்தின் போது அடிக்கடி ஆம்புலன்ஸ் வந்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 108 ஆம்புலன்ஸ் சேவைகள் கரூரில் 19 வாகனங்கள் இருக்கின்றன. கூட்டம் நடந்த இடத்தில் மட்டும் 6 வாகனங்கள் இருந்தன.
முதலில் இரவு 7.14 மணிக்கு 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு வர, 7.20 மணிக்கு முதல்முறையாக சென்றது. அடுத்த அழைப்பு 7.15 மணிக்கு வந்த நிலையில், 2ஆம் முறையாக 7.23 மணிக்கு ஆம்புலன்ஸ் சென்றது. அரசு ஆம்புலன்ஸ்கள் 6, கட்சித் தலைவர் வாகனம் பின் 2 ஆம்புலன்ஸ்கள், அதுபோக 5 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. கட்சியினரின் ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்ததால், அது உடனே கொண்டு வரப்பட்டது.
இரவு 7.45 மணி முதல் 9.45 மணி வரை அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கரூர் பிரச்சார கூட்டத்திற்கு தவெக கட்சியினர் 5 ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்திருந்தனர். சிலர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்து கூட்டத்திற்குள் முதலில் வந்தது தவெக ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் தான்.
முதலில் போலீஸ் மூலமாகவே தகவல் கிடைத்தது. தொலைப்பேசி சரியாக வேலை செய்யாததால், வயர்லெஸ் மூலமாக தகவல் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் பலரும் தண்ணீர் இல்லாமல் தவித்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் தவெகவினர் முன் வைத்து வரும் ஆம்புலன்ஸ் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன்











Click it and Unblock the Notifications