Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க எதுக்கு மகாபலிபுரம் வரை போகணும்? விஜய் வர மாட்டாரா? சந்திப்பை புறக்கணிக்கும் 20 குடும்பங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாபலிபுரத்தில் தவெக விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல குடும்பத்தினர் விஜயை சந்திக்க முன்வராததால்.. இந்த சந்திப்பு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நடிகர் விஜய் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில உறவினர்களிடையே இந்த சந்திப்பு குறித்த அதிருப்தி நிலவுகிறது.

tvk vijay

கரூர்: திங்கள் கிழமை சந்திக்க விஜய் பிளான்

41 குடும்பத்தினரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை விஜய் அவர்களைச் சந்திப்பார் என்றும், மதிய உணவுக்குப் பிறகு அவர்கள் புறப்படுவார்கள் என்றும் TVK தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். சந்திப்பிற்காக ஒரு ரிசார்ட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு ரிசார்ட்டின் அரங்கில் நடைபெறுமா அல்லது விஜய் ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாகச் சந்திப்பாரா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. TVK மூத்த நிர்வாகி ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, 20 குடும்பங்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. மீதமுள்ள 21 குடும்பங்கள் வர மறுத்துவிட்டன.

சில குடும்பத்தினர், நடிகர் விஜய் தங்கள் வீடுகளுக்கே வந்து சந்திப்பதற்குப் பதிலாக, சென்னைக்கு வரவழைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, வெள்ளிக்கிழமை காலை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை சென்னைக்கு வரவழைப்பது ஏன் என்றும் சில குடும்பங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. அதோடு நாங்கள் 30வது நாள் காரியங்களை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் நாங்கள் எப்படி விஜயை பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்களாம்.

தள்ளிப்போகும் மீட்டிங்

இதனால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் விஜயின் திட்டம் தள்ளிப்போகலாம் என்றும் கூறுகிறார்கள். செப்டம்பர் 27 அன்று கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். இதில் குறைந்தது 10 குழந்தைகள் மற்றும் பல பெண்கள் அடங்குவர். அன்று முதல் விஜய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டுள்ளார். கட்சி நடவடிக்கைகளும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் கூட்டம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், கட்சியின் அரசியல் செயல்பாடுகளுக்கும் ஒரு தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களில், 39 குடும்பங்களுக்கு ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக நிதியில் இருந்து தலா ₹20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு குடும்பங்களுக்கு சில காரணங்களால் பணம் தருவது தாமதமாகியுள்ளது. அனைத்து குடும்பங்களையும் திங்கட்கிழமை சென்னை கூட்டத்தில் கலந்துகொள்ள கட்சித் தலைவர்கள் சம்மதிக்க வைப்பார்கள் என்று விஜய் நம்புவதாகத் தெரிகிறது.

இந்த நிகழ்வை விஜய் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்ததாக கட்சி தெரிவித்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை கரூரில் உள்ள அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திக்காமல், கடலோர ரிசார்ட்டிற்கு வரவழைப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறாது என்று TVK-வை சேர்ந்த பலரும் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டுள்ளனர். "இதை இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாம்" என்று மூத்த TVK தலைவர் ஒருவர் நம்மிடம் தெரிவித்துள்ளார். பல குடும்பத்தினர் விஜயை சந்திக்க முன்வராததால்.. இந்த சந்திப்பு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+