பட்டையை கிளப்ப ரெடியான திமுகவின் புதிய வாரிசு.. வேலூரிலிருந்து டெல்லி செல்லும் கதிர் ஆனந்த்!
திமுகவின் இன்னொரு எம்பியாகிறார் கதிர் ஆனந்த்
Recommended Video
சென்னை: ஏற்கனவே பட்டைய கிளப்பி கொண்டும், பாஜக எம்பிக்களை அலற விட்டுக் கொண்டும் இருக்கும் திமுக எம்பிக்களின் பட்டியலில் புதுவரவாக நுழைய உள்ளார் கதிர்ஆனந்த்!
கருணாநிதி இருந்தபோது, திமுக எம்பிக்கள் என்றாலே ஓரிருவரே கண்முன் வந்து நிற்பார்கள். அதிலும், டெல்லியில் எந்தவித விவகாரங்களை பேசுவதானாலும் கருணாநிதியின் முக்கிய சாய்ஸ் டி.ஆர்.பாலுவாகத்தான் இருந்தார்.
ஆனால் இப்போது இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. 37 திமுக கூட்டணி எம்பிக்களும் ஒரு முடிவோடுதான் டெல்லிக்கு கிளம்பி போனார்கள். திமுக தேர்தலில் அபார வெற்றி பெற்றதை மோடி அரசு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான்.

செயல்பாடு
அதனால்தான் பதவியேற்பு விழாவுக்கு கூட கலந்து கொள்ளாதபடி ஒரு அழைப்பை ஸ்டாலினுக்கு விடுத்திருந்தது. இதை திமுக தரப்பு கண்டு கொள்ளவில்லை என்றாலும், தங்கள் செயல்பாட்டை நாடாளுமன்றத்தில் காட்டி வருகிறது. பதவியேற்ற முதல் நாளில் இருந்தே இப்படி பாஜக எம்பிக்கள் பிரஷரை திமுக எம்பிக்கள் எகிற வைத்து வருகின்றனர்.

வாரிசு எம்பி
அந்த வகையில் இப்போது இன்னொரு எம்பியாக கதிர் ஆனந்த் இணைய போகிறார். வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், கனிமொழி, என்ற வாரிசு வரிசையில் இணைய போகிறார். கதிர்ஆனந்த் அரசியலுக்கு புதியவர் என்று நமக்கு தெரியும். ஆனால் அவர் ஒன்றும் புதியவர் இல்லை, கலைஞரின் கையால் வளர்க்கப்பட்டவர் என்று துரைமுருகன் சொல்கிறார்.

எதிர்பார்ப்பு
எப்படி இருந்தாலும் கதிர் ஆனந்துக்கு துரைமுருகன் துணை என்றும் இருக்கும் என்றாலும், திமுக எம்பிக்களின் வரிசையில் கதிர் ஆனந்த்தும் தற்போது இணைய உள்ளதால், அவர் எப்படி பேசபோகிறார், அவரது அரசியல் பார்வை எப்படி இருக்கும், மற்ற திமுக கூட்டணி எம்பிக்களுக்கும், வாரிசு எம்பிக்களுக்கும் இணையாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

கசப்பான அனுபவம்
ஆனால் ஒரு விஷயம் இதில் உள்ளது. அது என்னவென்றால், திமுக மற்றும் கூட்டணியின் மற்ற 37 எம்பிக்களும் ரொம்ப கேஷுவலாக தேர்தலை ஜெயித்து போயுள்ளனர். ஆனால் கதிர் ஆனந்த் மட்டும்தான் தப்பிப் பிழைத்துப் போயுள்ளார். இது ஒன்று மட்டுமே வேலூர் வெற்றஇயில் திமுகவுக்கு கிடைத்த ஒரு கசப்பான சமாச்சாரம்!

ஆட்டம்
ஆனாலும் என்ன ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் அது வெற்றிதான். அந்த வகையில் திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்து தமிழக மக்கள் 38 தொகுதிகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். இதற்குப் பதிலுக்கு திமுக எந்த வகையில் மக்களை குளிர்விக்கப் போகிறது என்பதில்தான் அதன் எதிர்காலமே அடங்கியுள்ளது. இனிமேல்தான் ஆட்டமும் ஆரம்பிக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications