காது, கண் வழியாக கசியும் ரத்தம்.. மியான்மர் நிலநடுக்க துயரம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து
சென்னை: உலகையே பேரதிர்ச்சியில் உறையவைத்திருக்கும் மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பல்லாயிரத்தைத் தாண்டி வருகிறது. கொத்து கொத்தாக, கட்டிடங்களோடு கட்டிடங்களாக புதைகுழிகளுக்கும் மனித உயிர்கள் புதையுண்டு போன துயரத்தில் இருந்து மியான்மர் தேசம் மீண்டு எழுவதற்கு இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.
மியான்மர் நிலநடுக்க துயரம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தமது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ள கவிதை:

மியான்மரை நினைத்தால்
கழிவிரக்கம் கொள்கிறது
கணத்துப்போன நெஞ்சு
உயரமான துயரத்தை
ஒரு தனிமனிதன்
எதிர்கொள்வதைப்போல
ஒரு நாடே எதிர்கொள்கிறது
கழுத்தில்
ராணுவ ஆட்சியின்
இரும்புப் பிடி
மார்பில்
கிளர்ச்சியாளர்களின்
துளைக்கும் துப்பாக்கி
தலைக்குமேலே
கபாலம் பிளக்கும்
ராணுவ விமானங்கள்
காலடியின்கீழே
பூமியைக் களவாடும்
பூகம்பம்
நாட்டின் பாதியில்
வசதியாய் வாழும் வறுமை
இந்நிலையில்
ஆயிரம் ஆயிரமாய்
பூமியால் பூமிக்குள்
புதைக்கப்பட்ட மக்கள்
கேட்டால் காதுவழியாகவும்
கண்டால் கண்வழியாகவும்
கசிகிறது ரத்தம்
ஒருகாலத்தில் தமிழர்களின்
அமுதசுரபியாய் இருந்த தேசம்
இன்று
திருவோடாய்த் திண்டாடுகிறது
அந்த நாட்டை
இயற்கை ஆசீர்வதிக்கட்டும்
உலக நாடுகள்
உதவி புரியட்டும்
மியான்மரை நினைத்தால்
— வைரமுத்து (@Vairamuthu) April 2, 2025
கழிவிரக்கம் கொள்கிறது
கனத்துப்போன நெஞ்சு
உயரமான துயரத்தை
ஒரு தனிமனிதன்
எதிர்கொள்வதைப்போல
ஒரு நாடே எதிர்கொள்கிறது
கழுத்தில்
ராணுவ ஆட்சியின்
இரும்புப் பிடி
மார்பில்
கிளர்ச்சியாளர்களின்
துளைக்கும் துப்பாக்கி
தலைக்குமேலே
கபாலம் பிளக்கும்
ராணுவ விமானங்கள்… pic.twitter.com/oOpz76JqGI
நம் அண்டைநாட்டில்
மனித மாமிசங்களைக்
காக்கைகள் கொத்திக்
கொண்டிருக்கும்பொழுது,
நாம்
நாய்களுக்கு
இறைச்சித் துண்டு
இட்டுக்கொண்டிருக்க முடியாது
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications