Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காது, கண் வழியாக கசியும் ரத்தம்.. மியான்மர் நிலநடுக்க துயரம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகையே பேரதிர்ச்சியில் உறையவைத்திருக்கும் மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பல்லாயிரத்தைத் தாண்டி வருகிறது. கொத்து கொத்தாக, கட்டிடங்களோடு கட்டிடங்களாக புதைகுழிகளுக்கும் மனித உயிர்கள் புதையுண்டு போன துயரத்தில் இருந்து மியான்மர் தேசம் மீண்டு எழுவதற்கு இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.

மியான்மர் நிலநடுக்க துயரம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தமது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ள கவிதை:

Myanmar Earthquake vairamuthu

மியான்மரை நினைத்தால்
கழிவிரக்கம் கொள்கிறது
கணத்துப்போன நெஞ்சு

உயரமான துயரத்தை
ஒரு தனிமனிதன்
எதிர்கொள்வதைப்போல
ஒரு நாடே எதிர்கொள்கிறது

கழுத்தில்
ராணுவ ஆட்சியின்
இரும்புப் பிடி

மார்பில்
கிளர்ச்சியாளர்களின்
துளைக்கும் துப்பாக்கி

தலைக்குமேலே
கபாலம் பிளக்கும்
ராணுவ விமானங்கள்

காலடியின்கீழே
பூமியைக் களவாடும்
பூகம்பம்

நாட்டின் பாதியில்
வசதியாய் வாழும் வறுமை

இந்நிலையில்
ஆயிரம் ஆயிரமாய்
பூமியால் பூமிக்குள்
புதைக்கப்பட்ட மக்கள்

கேட்டால் காதுவழியாகவும்
கண்டால் கண்வழியாகவும்
கசிகிறது ரத்தம்

ஒருகாலத்தில் தமிழர்களின்
அமுதசுரபியாய் இருந்த தேசம்
இன்று
திருவோடாய்த் திண்டாடுகிறது

அந்த நாட்டை
இயற்கை ஆசீர்வதிக்கட்டும்
உலக நாடுகள்
உதவி புரியட்டும்

நம் அண்டைநாட்டில்
மனித மாமிசங்களைக்
காக்கைகள் கொத்திக்
கொண்டிருக்கும்பொழுது,
நாம்
நாய்களுக்கு
இறைச்சித் துண்டு
இட்டுக்கொண்டிருக்க முடியாது

இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+