எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை.
வேலுமணி எம்எல்ஏக்கள் 5 பேர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். மேலும் 4 எம்எல்ஏக்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். பிரச்சனை வேறு திசையில் பயணிப்பதால் அதிமுகவில் பழனிசாமி, வேலுமணி அணியினர் சமாதானம் ஆக முடிவு செய்துள்ளனர். இதை சி.வி. சண்முகம் வீட்டிற்கு வந்த கே.சி. வீரமணி உறுதிபடுத்தியுள்ளார்.

சி.வி சண்முகம் வீட்டில் கே.சி வீரமணி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, எம்ஆர்சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீரமணி செய்தியாளர்களிடம், "நாங்கள் அனைவரும் ஒன்றாகிவிட்டோம். தாய், பிள்ளை எல்லாம் ஒன்றாகிவிட்டோம். உங்களுக்கு செய்தி வேண்டும் அவ்வளவு தானே. எல்லா பிரச்சனையும் தீர்ந்து ஒன்று சேர்ந்துவிட்டோம்" என்றார்.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று புரட்சி தலைவி அம்மா கூறியுள்ளார். கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இன்றே சமாதானம்
இனி நமக்குள் பிரிவில்லை.. இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை. நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே. நாளை நமதே.. தமிழ்நாடும் நமதே என்று கூறியுள்ளனர். இதன் மூலம் பிரிந்துள்ள அதிமுக இன்றே ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது.
-
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
எஸ்.பி.வேலுமணியிடம் சீறிப்பாய்ந்த சி.வி.சண்முகம்.. எல்லா பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம்! -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications