நெக்ஸ்ட் லெவலுக்கு ரெடி.. கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று ஏப்ரல் 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின்போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன.

இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது... குறிப்பாக, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இப்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.
தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரபூர்வமான முடிவுகளை பெற்றுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கிமு ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததையும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.
அதேபோல, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.. கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக்கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது வெளிப்படுகிறது.
இந்த அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த மாதம் 5-ந் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கீழடியை பொதுமக்கள் பார்வையிட்டும் வருகின்றனர்.. இந்த நிலையில், கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் திருவண்ணாமலை கீழநமண்டியில் அகழாய்வு பணிகளை இன்று 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரஸ் வாயிலாக தொடங்கி வைத்தார்.. கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.. வீரணன் என்பவரது நிலத்தில் முதலில் எட்டு குழிகள் தோண்டப்பட உள்ளன. கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் மேடு உள்ளதாகவும் முழுவதுமாக அகழாய்வு செய்தால் தான் பண்டைய கால தமிழர்களின் வாழ்வியலை முழுமையாக வெளி கொணர முடியும் என தொல்லியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் அருங்காட்சியகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தும் பணியில் இருந்ததால் ஜனவரிக்கு பதில் ஏப்ரலில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்குகின்றன... இதுவரை 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. மத்திய தொல்லியல் துறை 3 முறையும் தமிழக தொல்லியல் துறை 5 முறையும் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன... இதில், 8ம் கட்ட அகழாய்வில் 20 குழிகள் தோண்டப்பட்டு சுடுமண் பொம்மை உறை கிணறுகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். கொந்தகை அகழாய்வு தளத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications