சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அவரும் நானும்".. நடுவில் கொரோனா.. குஷ்பு போட்ட உருக்கமான போட்டோ.. நெகிழும் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு பிறகு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கணவர் சுந்தர் சியை இப்படி தள்ளியிருந்துதான் காண வேண்டியுள்ளது என புகைப்படத்துடன் நடிகை குஷ்பு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. முதல் அலையில் தப்பியவர்கள் இந்த இரண்டாவது அலையின் கொடூர பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஒரு பக்கம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. மறுபுறம் தலைவிரித்தாடும் கொரோனா.. தத்தளிக்கும் தமிழக மக்கள்ஒரு பக்கம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. மறுபுறம் தலைவிரித்தாடும் கொரோனா.. தத்தளிக்கும் தமிழக மக்கள்

அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குநர் சுந்தர் சிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

இரு மகள்களுக்கும் கொரோனா நெகட்டிவ்

இரு மகள்களுக்கும் கொரோனா நெகட்டிவ்

இதையடுத்து குஷ்பு, அவரது இரு மகள்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு நெகட்டிவ் என வந்தது. இதையடுத்து சுந்தர் சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட சுந்தர் சி மருத்துவமனையிலிருந்து கடந்த 14ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

குஷ்பு ட்வீட்

குஷ்பு ட்வீட்

எனினும் அவர் 7 நாட்களுக்கு வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் அவர் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பதாகவும் இன்னும் 7 நாட்களுக்கு பிறகே அவரை சந்திக்க முடியும் என்றும் குஷ்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

போன்

போன்

இந்த நிலையில் அவர் இன்றைய தினம் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் வீட்டுக்குள் ஒரு நாற்காலியில் சுந்தர் சி அமர்ந்து கொண்டு போனை பார்த்துக் கொண்டிருக்கிறார். குஷ்பு வீட்டு வராண்டாவில் உள்ள படிக்கெட்டில் உட்கார்ந்து கொண்டு தனது கணவனை பார்க்கிறார். இருவரும் மாஸ்க் அணிந்து கொண்டிருக்கிறார்.

3 நாட்கள்

3 நாட்கள்

குஷ்பு ட்வீட்டில் கூறுகையில் தற்போது நாங்கள் இருவரும் இப்படித்தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். இன்னும் 3 நாட்கள்தான் உள்ளன. அதன் பின்னர் சுந்தர் சி வீட்டுக்கு வந்துவிடுவார் என உருக்கமாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

English summary
Actress Khushbu Sundar says that This is how we see each other nowadays.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X