உடனடி ஆக்ஷன்.. தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பு!
சென்னை: ஹேக் செய்யப்பட்ட தனது ட்விட்டர் பக்கத்தை மீட்டுக் கொடுத்த தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அவரது குழுவினருக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அரசியல், சமூகம், சினிமா தொடர்பாக அவர் பதிவு செய்யும் கருத்துகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன.
இந்த நிலையில் அண்மையில் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ப்ரையன் என்ற பெயருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து தேவையற்ற ட்வீட்கள் வந்தன.

மாற்றம்
அவரது பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்தும் மாற்றப்பட்டு குஷ்புவால் அவரது பக்கத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக நடிகை குஷ்பு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு அளித்தார்.

சைபர் கிரைம் போலீஸார்
அது போல் சைபர் கிரைமிலும் புகார் அளித்திருந்தார். நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் எனக் கேள்வி எழுப்பி ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதி உள்ளது. இதனிடையே குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தை பழையபடி மீட்டெடுத்துவிட்டார்.
Recommended Video

தமிழக டிஜிபி
இதையடுத்து குஷ்பு தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில், "ஹேக் செய்யப்பட்ட எனது ட்விட்டர் கணக்கை துரிதமாக, பாதுகாப்பாக மீட்டு கொடுக்க உதவிய டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அவரது குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மழை
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி கொட்டும் மழையில் குடையை அவரே பிடித்தவாறு இருந்தார். அந்த புகைப்படத்தை பதிவிட்ட குஷ்பு, ராகுல், பிரியங்காவுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்திருந்த புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தவர் குஷ்பு.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications