Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டுக்கே குட்நியூஸ் வருது.. பொங்கலுக்கு ரெடியா இருங்க..கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுல யார்? வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படும் என்ற ஆர்வம் சென்னைவாசிகளுக்கு பெருகிவரும் நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போடப்பட்டது. ஜிஎஸ்டி சாலையில், புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளும், ரூ.17 கோடியில் துரிதமாக நடந்து வந்தது..

Kilambakkam Bus Stand and Do you know when the Kelambakkam Bus Terminus bus stand opens

அதேபோல, பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர், சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் மேற்கொள்ளப்பட்டன.

ரயில் நிலையம்: இதைத்தவிர, பஸ் ஸ்டாண்டு அருகில், சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்துவதுடன், புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டன. இதற்கு நடுவில், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது..

இந்த பணிகள் காரணமாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பது தள்ளிப்போயுள்ளது என்றாலும், எப்போது திறக்கப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.. இந்நிலையில், இதுகுறித்த ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.

பறந்த உத்தரவு: தற்சமயம், கிளாம்பாக்கத்தில், 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாம்.. இன்னும் 10 சதவீதம் மட்டுமே உள்ளது.. அய்யஞ்சேரி இணைப்பு சாலை பணிகளும் 90 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளதால், எஞ்சிய பணிகளை வரும் 15-ந்தேதிக்குள் பணிகளை முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். அதனால், இறுதிகட்ட பணிகளை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அந்தவகையில், அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும் என்றும், பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பெருத்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

கடந்த தீபாவளி பண்டிக்கைக்கு முன்பே இந்த பஸ் ஸ்டாண்டை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது பெய்த மழையால், மொத்த பிளானும் சொதப்பலாகி, மழைநீர் வடிகால்வாய் மற்றும் இணைப்பு சாலை பணிகள் கையில் எடுக்கப்பட்டன.

விரைவில் ரெடி: அதனால்தான் பொங்கல் பண்டிகையின்போது, இந்த பஸ் ஸ்டாண்டை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்று முடிவாகி உள்ளதாம். அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் மீதமுள்ள பணிகளையும் முடிக்க அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதால், கிளாம்பாக்கமே பரபரப்பாக காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+