Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தில் கவனிச்சீங்களா? கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறப்பு ஏன் தள்ளி போகுது தெரியுமா? ஓஹோஹோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு குறித்த 2 மகிழ்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளன.. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.

வண்டலூர் அருகே சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் இத்தனை நாளும் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது. ஆனால், சில பணிகள் மீதமிருந்ததால், பஸ்முனையை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

Kilambakkam Bus Terminus and Do you know When is Chennai Kilambakkam Bus Stand going to be completed

ஜரூர் வேகம்: இப்போது, கிட்டத்தட்ட 99 சதவீத பணிகளும் முடிவடைந்து, திறப்பு விழாவுக்கு பேருந்து நிலையம் தயாராகி வருவதாக தெரிகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அதாவது, முதல்கட்டமாக திருநெல்வேலிக்கும், அடுத்து மதுரைக்கும், 3-வது கட்டமாக விழுப்புரத்துக்கும் பஸ்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு, படிப்படியாக பஸ் ஸ்டாண்டு முழுவதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.

கட்டுமான பணிகள்: இதனிடையே, கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

காரணம், இந்த பஸ் ஸ்டாண்டின் நுழைவாயலில், ஜிஎஸ்டி சாலையில் லேசாக மழை பெய்தாலும், 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்குகிறது. இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வடிகால் வசதி: அதனால்தான், பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் தேங்கும் மழைநீரை ஊரப்பாக்கம் ஏரிக்கு அனுப்பும் வகையில், பிரமாண்ட வடிகால் அமைப்புகளை ஏற்படுத்த சிஎம்டிஏ முடிவு செய்தது. இதற்காக 17 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் அமைப்புகளும் ஏற்படுத்தப்படும் என்று சேகர்பாபுவும் அறிவித்தார் எனினும், இதற்கான பணிகள் ஆரம்பமாகியும் இன்னும் முடியவில்லை.. வடிகால் கட்டுமான பணிகள் முடிந்தால்தான், பஸ் ஸ்டாண்டை திறக்க முடியும்.

Kilambakkam Bus Terminus and Do you know When is Chennai Kilambakkam Bus Stand going to be completed

இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2 நாட்களாகவே சென்னையில் மழை பெய்து வருகிறது.. வழக்கம்போல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பகுதியிலும் மழைநீர் சூழ்ந்தது.. வழக்கம்போல் இந்த மழைநீர் வீடியோவும் வைரலானது. இதையடுத்து, வடிகால் வசதி பணிகள் மும்முரமாகி கொண்டிருக்கின்றன.

இதுதான் காரணம்: இந்நிலையில், சிஎம்டிஏ உறுப்பினர்கள் இதுகுறித்து சொல்லும்போது, "மழைநீர் வடிகால் அமைப்பதில் முதல் கட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டன. ஆனால், ஜிஎஸ்டி சாலையின் குறுக்காக கால்வாய் அமைக்க வேண்டும்.. இந்த பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் வடிகால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார். அந்தவகையில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு விழா இன்னும் தள்ளிப்போயுள்ளதாகவே கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+