கிளாம்பாக்கத்தில் என்னங்க இது? கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இது வேறயா? ஸ்டேஷன் வாசலில் குழம்பிய ஜனம்
சென்னை: கிளாம்பாக்கத்தில் ஒருவழியாக எல்லா பிரச்சனையும் முடிந்துவிட்டது என்று இன்னொரு பிரச்சனை முளைத்துள்ளன.. இது தொடர்பான கோரிக்கை தமிழக அரசுக்கு சென்றுள்ளது. என்னவாம்?
ஊரப்பாக்கம்: ஜிஎஸ்டி சாலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலேயே, புதிய காவல்நிலையம் சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.. ஊரப்பாக்கத்தின் ஒரு பகுதி, ராம் நகர், செல்லியம்மன் நகர், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி, காரணைப்புதுச்சேரி, காட்டூர், பெரியார் நகர், விநாயகபுரம், கோகுலம் காலனி, அண்ணா நகர், கொளப்பாக்கம், வண்டலூர், ஊனைமாஞ்சேரி போன்ற பகுதிகள் இந்த காவல்நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது.

ஆனாலும், கிளாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்யும் வசதி இல்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்களாம்.. இந்த போலீஸ் ஸ்டேஷ்ன் திறக்கப்பட்டு இரண்டரை மாதம் ஆகியும், எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யும் வசதி இல்லாமல் இருப்பது, மிகவும் சிக்கலை தந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்..
வசதியில்லை: ஏற்கனவே ஓட்டேரி, கூடுவாஞ்சேரி காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களையும், புதிதாக திறக்கப்பட்ட இந்த கிளாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுடன் இணைக்கப்பட்டுவிட்டது, கூடுதல் குழப்பத்தை தந்துவருகிறதாம்.
இதன்காரணமாக, கொலை, கொள்ளை, அடிதடி, திருட்டு, வழிப்பறி என எந்த புகாராக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களால், கிளாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுக்க முடியவில்லையாம்.
அப்படியே, புகார் கொடுக்க போனாலும், அங்குள்ள போலீசார், "FIR பதிவு செய்யும் அதிகாரம் எங்களுக்கு இன்னும் தரவில்லை, அதனால், ஏற்கனவே எந்த ஸ்டேஷனில் புகார் தந்தீர்களோ, அங்கேயே போங்கள்" என்று சொல்லி பாதிக்கப்பட்டவர்களை ஓட்டேரி மற்றும் கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு திருப்பி அனுப்புகிறார்களாம்.
வேண்டுகோள்: இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நொந்துபோய், எங்கே போய் புகாரை தருவது என்று தெரியாமல் விழிக்கிறார்களாம். இது மிகப்பெரிய மன உளைச்சலையும், அலைச்சலையும் தருவதாக புலம்புகிறார்கள்.. அதனால், தமிழக அரசு இதில், தலையிட்டு, உடனடியாக காவல் நிலையத்தை, முழு செயல்பாட்டிக்கு கொண்டு வரவேண்டும், பொதுமக்களின் புகார்களை பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications