கிளாம்பாக்கத்துக்குள் "நுழைஞ்சதுமே".. படக்னு காலில் விழுந்து கெஞ்சி.. யார் தெரியுமா? பதறிய சிவசங்கர்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் நுழைந்ததுமே, அமைச்சரின் காலில் 300-க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் காலில் விழுந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. என்ன நடந்தது கிளாம்பாக்கத்தில்?
புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், முழுமையான வசதிகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்ற புகார்கள் கிளம்பி உள்ளன.. எனவே, அடிப்படையான சில வசதிகளையும் செய்துதர வேண்டும் என்பதுடன், இணைப்பு போக்குவரத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கிளாம்பாக்கம்: அதேபோல, கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனை உடனடியாக திறக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்த பணிகள் அனைத்தையும் தமிழக அரசு கையில் எடுத்துள்ளதால், கிளாம்பாக்கம் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த பஸ் ஸ்டாண்டில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.. அதாவது, தாங்கள் பணிபுரிய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தாங்கள் பணிபுரிய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்" என்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் தமிழக அரசிடம் மனு தந்துள்ளார்கள்.
நடைபாதை வியாபாரிகள்: இப்படிப்பட்ட சூழலில், நடைபாதை வியாபாரிகளும் புதிய கோரிக்கையை விடுத்துள்ளனர். அனுமதிக்கக்கோரி திரளான பெண்கள் அமைச்சர் சிவங்கர் காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பார்வையிட வந்தார். அப்போது, அங்கு பெண்கள் சிலர் திரண்டு வந்தனர்.. அமைச்சரை பார்த்ததுமே, அவரின் காலில் திடீரென விழுந்து, தங்கள் வாழ்வாதாரத்தை காக்க நீங்கள்தான் உதவ வேண்டும் என்று கெஞ்சினார்கள்..
பதறிய அமைச்சர்: இதனால் பதறிப்போன அமைச்சர், அவர்களது குறைகள் என்னவென்று கேட்டார்.. அப்போதுதான் தெரிந்தது இந்த பெண்கள் அனைவரும் தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள நடைபாதை வியாபாரிகள் என்பது.. பஸ் ஸ்டாண்டிலேயே பழம், வாட்டர் பாட்டில் போன்றவற்றை விற்பனை செய்து வருபவர்கள்.. ஆனால், பஸ்கள், அங்கிருந்து பெருங்களத்தூருக்கு மாற்றப்பட்டதால், இவர்களும் அங்கு வந்து வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள்..
இந்நிலையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இந்த நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அருகே தங்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு, அந்த பெண்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சிவசங்கர் அந்த பெண்களிடம் உறுதி தந்தார்..
பரபரப்பு: இதுகுறித்து செய்தியாளர்களிடம் அந்த பெண்கள் சொல்லும்போது, இந்த கடைகள் மட்டும்தான் எங்களுக்கு இருக்கும் ஒரே பிழைப்பு.. இதை நம்பியே எங்க ஜீவனம் உள்ளது.. நாங்கள் வாழுறதும், சாவுறதும் அரசின் கையில்தான் இருக்கு" என்று கண்ணீர் மல்க சொன்னார்கள். அமைச்சரின் காலில், 300க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் திடீரென விழுந்து கெஞ்சிய சம்பவத்தினால் கிளாம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications