மின் வாரிய கடனை மக்கள் தலையில் சுமக்க வைக்க முடியாது! படபடக்கும் கொங்கு ஈஸ்வரன்!
சென்னை: மின் வாரிய கடனை மின் நுகர்வோர் தலையில் சுமக்க வைக்க முடியாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று உணர்ந்தாலும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் அது குறைக்கப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மின் கட்டணம்
சிறு, குறு தொழில்களுக்கான நிலை கட்டண உயர்வு தொழில்களுக்கு சிரமத்தை உண்டாக்கி அதிகப்படியான விலை ஏற்றத்தையும், வேலை இழப்புகளை உருவாக்கும். தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரைகளை அறிவித்து மின்சார வாரியம் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் எதிர் கருத்துக்களை கண்கூடாக பார்க்க முடிகிறது.

தவிர்க்க முடியாதது
மின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று உணர்ந்தாலும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பது குறைக்கப்பட வேண்டும். வீட்டு இணைப்புகளுக்கான நிரந்தர கட்டணம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது குறைக்கப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற தொழிற்சாலைக்கான நிலை கட்டணம் கண்டிப்பாக மறுபரிசீலினை செய்யப்பட்டு குறைக்கப்பட வேண்டும்.

வேலை இழப்பு
சாத்தியமே இல்லாத நிலை கட்டண உயர்வை தாங்க முடியாது என்பதை தமிழகம் முழுவதும் இருக்கின்ற தொழில் துறையினர் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பரிந்துரைக்கப்பட்ட நிலை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டால் பல சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்காத நிலை ஏற்பட்டு லட்சக்கணக்கான வேலை இழப்புகளும், அதனால் உற்பத்தி பாதிப்புகளும், விலையேற்றத்தையும் ஏற்படுத்தும்.

மொத்த கடன்
மின்வாரியத்தினுடைய மொத்த கடனையும் மின் நுகர்வோர் தலையில் சுமக்க வைக்க முடியாது. அதை தாங்க கூடிய நிலையில் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இன்று இல்லை. கொரானா காலகட்டத்துக்கு பின்னர் சிறிது சிறிதாக தொழில் துறை முன்னேறி வரும் நிலையில் இந்த விலையேற்றம் அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதிப்பு ஏற்படாமல்
தமிழக மின்வாரியத்திற்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தாலும் அதை கட்டணமாக கட்ட வேண்டிய மக்களினுடைய நிலைமையையும் கவனத்தில் கொண்டு கட்டண உயர்வு பரிந்துரையை மறுபரிசீலனை செய்து அனைத்து கட்டண உயர்வுகளையும் குறைக்க வேண்டும். குறிப்பாக தொழிற்சாலைகளுக்கான நிலை கட்டண உயர்வை அதிகபட்சமாக ஒரு கிலோ வாட்டுக்கு 100 ரூபாய்க்கு மேல் போகாத படியும் நடுத்தர மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications