சுற்று சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தில் கோலப் போராட்டம் #ScrapEIA2020
சென்னை: சுற்று சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழகத்தில் இன்று பல இடங்களில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் சுற்று சூழல் வரைவு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஜூன் 30-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
பின்னர் இது ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை காலநிலை மேம்பாட்டுக் குழுவின் சார்பாக, இந்த வரைவு அறிக்கைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வீடுகளில் கோலம் வரைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் பல இடங்களில் #ScrapEIA2020, வேண்டாம் EIA2020 போன்ற வாசகங்களுடன் கோலங்கள் பதிவிடப்பட்டன. சமூக வலைதளங்களிலும் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு டிரெண்டிங்கானது.
சுற்றுச் சூழல் வரைவு எதிர்ப்புக்கான கோலப் போராட்டம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு,சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது.மனிதர்கள் நலனை விலையாக கொடுத்து வளர்ச்சி பற்றி பேசுகிறது.நாடு முழுக்க கோலங்கள் மூலம் இக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வரையப்பட்ட சில கோலங்கள் என பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் போது இதேபோல் வீடுகள் தோறும் பொதுமக்கள் கோலங்கள் போடும் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அப்படி கோலம் போட்டவர்கள் பல இடங்களில் கைதும் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications