இபிஎஸ் ஒரு காட்டுமிராண்டி! கொடநாடு கொலை வழக்கில் கச்சேரி இருக்குது! கொதிக்கும் கோவை செல்வராஜ்!
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஒரு காட்டுமிராண்டி என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.
Recommended Video
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளி கூண்டில் நிற்கக் கூடாது என்பதற்காக கட்சியை அபகரிக்க முயற்சிக்கிறார்கள் என சாடியிருக்கிறார்.
பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் இன்னும் ஓ.பன்னீர்செல்வத்துடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் எனக் கூறி புதிய புயலை கிளப்பியுள்ளார் கோவை செல்வராஜ்.

கோவை செல்வராஜ்
அதிமுக செய்தித் தொடர்பாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமியை பற்றி கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்திருந்தார். அதில் தர்மத்தை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது என்றும் அவர் துரோகி என்பதை அடையாளம் கண்டதால் தான் அவரிடம் முதல்வர் பொறுப்பை ஜெயலலிதா ஒரு முறை கூட வழங்கவில்லை எனவும் கோவை செல்வராஜ் ஆவேசம் காட்டினார்.

ஜம்பம் பலிக்காது
மேலும், பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் இன்னும் ஓ.பன்னீர்செல்வத்துடன் தான் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்றும் முழு மனமில்லாமல் நிர்பந்தம் காரணமாக அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். எடப்பாடி பழனிசாமியின் ஜம்பம் பலிக்காது எனக் கூறிய கோவை செல்வராஜ், அதிமுகவை காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வத்தை விட்டால் வேறு ஆளில்லை எனக் கூறினார்.

பணம் -பதவி
பணமும் பதவியும் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியம் என்றும் பதவிக்காக யாரையும் கொலை செய்யக்கூட அவர் தயங்கமாட்டார் எனவும் கோவை செல்வராஜ் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த அடிபட்டுள்ளதாகவும் ஆனால் எந்த காயமும் படாமல் பேண்டேஜ்களை ஒட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நாடகம் ஆடி வருவதாகவும் கூறினார்.

கூத்தாட்டம்
ஒன்றரை கோடி தொண்டர்களால் புனிதமான இடமாக கருதப்படும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் குடிகாரர்களை வைத்துக்கொண்டு கும்மாளமும், கூத்தாட்டமும் போட்டதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் அறிவார்கள் என கோவை செல்வராஜ் கொந்தளித்தார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications