கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மாற்றம்.. 104C நம்பரை நோட் பண்ணுங்க.. கோயம்பேடு டூ கூடுவாஞ்சேரி என்னாச்சு?
சென்னை: வார விடுமுறையையொட்டி, இன்றும், நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
வழக்கமாக விசேஷ நாட்களிலும், வார இறுதி நாட்களிலும், பண்டிகைகளின்போதும், பொதுமக்களின் நன்மைக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை கூடுதலாக இயக்குவது வழக்கம். அந்தவகையில், இப்போது வார விடுமுறை என்பதால், சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைவு பேருந்து: சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 880 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அதுமட்டுமல்ல, வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுவாஞ்சேரி: இப்படிப்பட்ட சூழலில், கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பஸ்களின் தடம் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மாநகர் போக்குவரத்துக் கழகம் பொது மக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பஸ்களை இயக்கி வருகின்றன. மேலும், ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தடம் எண் வழங்கி பயணிகள் எளிதாக பயணம் செய்ய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி cut பஸ், தடம் எண் 104சி என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104சி பஸ், தடம் எண்.104சிஎக்ஸ் என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும்.
பழைய எண்கள்:-
புதிய எண்கள்:-
ரயில்வே நிலையம்: இந்த 104C என்ற வழித்தடத்தில், போரூர் டோல் கேட், மதுரவாயல் வழியாக புறவழிச்சாலையிலும் கிளாம்பாக்கத்திற்கு கோயம்பேட்டில் இருந்தும் இயங்குகிறது. எனினும், பஸ்ஸில் சென்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால்தான், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற எதிபார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications