Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேபி பார்க் ஊழல்.. மாவீரன் வந்து மேலே பார்த்தால் தான் எப்ஐஆர் வருமா? அறப்போர் இயக்கம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் கட்டிடங்களை கட்டிய பிஎஸ்டி எம்பையர் நிறுவனம் மீது எப்ஐஆர் எப்போது போடப்படும் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது. மாவீரன் வந்து மேலே பார்த்தால் தான் எப்ஐஆர் வருமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை, புளியந்தோப்பில் உள்ள கேசவ பிள்ளை பூங்காவில் கடந்த 2016-ம் ஆண்டு 112 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1,920 வீடுகள் கொண்ட உயர்மடட் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரசால் கட்டப்பட்டது.

KP Park Scam: Will the FIR come only if Maveeran comes and looks up? arappor iyyakkam question

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்றதாக இருப்பதாக அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக வீடியோக்கள் வெளியான நிலையில், ஐஐடி நிறுவனத்தின் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டுதான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் அறிக்கை சமர்பித்தது.

அந்த அறிக்கையில் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்தை தடைபட்டியலில் சேர்க்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தது. இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த நிலையில், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை அறப்போர் இயக்கம் தொடர்ந்து வைத்து வருகிறது.

KP Park Scam: Will the FIR come only if Maveeran comes and looks up? arappor iyyakkam question

அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் இது. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட IIT ஆய்வுக்குழு மிக மோசமான தரத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்று தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளது.

அதாவது ஒரு மூட்டை சிமெண்டுக்கு 5 மூட்டை மணல் கலப்பதற்கு பதிலாக 15 மூட்டை மணல் கலந்து பூச்சு வேலை செய்துள்ளார்கள். ஆனால் இது வரை இந்த முறைகேடு சம்பந்தமாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த தரமற்ற கட்டிடத்தை கட்டிய PST EMPIRE நிறுவனம் மீது FIR போட்டு விசாரணை நடத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு மேலும் ஒரு அரசு கட்டுமான டெண்டரை வழங்கி திமுக அரசு அழகு பார்த்துள்ளது. ஊழல் ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு எதிராக கேள்விகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருப்போம்." என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

KP Park Scam: Will the FIR come only if Maveeran comes and looks up? arappor iyyakkam question

முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்ப இருந்தது. மேலும் தரம் குறித்து ஐஐடியின் CUBE நிறுவனம் அளித்த முழு ஆய்வு அறிக்கையையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டிருந்தது. மேலும் அப்போது பி எஸ் டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள மாவீரன் படம் கேபி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் தரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மாவீரன் வந்து பார்த்தால் தான் எப்ஐஆர் போடப்படுமா என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+