Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருதயக் கோளாறால் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை.. உயிர் காக்க உதவி செய்யுங்கள்.. ப்ளீஸ்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிறந்து 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு சிக்கலான இருதய நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்தால் தான் இந்த குழந்தை உயிர் பிழைக்கும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் பச்சிளம் குழந்தையின் தந்தையால் பணம் திரட்ட முடியாத காரியம் என்பதால் உங்களால் முடிந்த சிறு உதவியை கூட செய்து பச்சிளம் குழந்தை உயிர் காக்க உதவுங்கள்.. ப்ளீஸ்..

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேவன் ருத்ரப்பா. அவரது மனைவி திருமதி சம்பங்கியம்மா. இந்த தம்பதிக்கு கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.

heart disease Krishnagiri heart defect surgery

மூச்சு விடுவதில் சிரமம்

சிறிய கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த மாதேவன் ருத்ரப்பா - சம்பங்கியம்மா தம்பதிக்கு வாழ்க்கையில் கடவுள் கொடுத்த வரம் போல மகள் கிடைத்ததால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். எல்லா பெற்றோரைப் போல தங்கள் மகளின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், நாம் பட்ட கஷ்டத்தை அவள் படக்கூடாது என்று கனவு காண தொடங்கினர்.

வாழ்க்கையில் வசந்தம் வீச தொடங்கிய நிலையில், மகள் பிறந்து சில நாட்களில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பச்சிளம் கைக்குழந்தையாக இருந்த அவர்களது மகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

heart disease Krishnagiri heart defect surgery

சிக்கலான இருதய நோய்

அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வரும் 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பார்த்து பெற்றோர் வேதனை அடைந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை செய்த எம்.ஐ.ஓ.டி. மருத்துவர்கள், குழந்தைக்கு மிகவும் சிக்கலான இருதய நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

Unobstructed Supracardiac Total Anomalous Pulmonary Venous Connection (TAPVC) என்ற உயிருக்கு ஆபத்தான பிறவி இதயக் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது. குழந்தையின் இதயம் இயல்பான முறையில் இணைக்கப்படவில்லை என்றும், இதை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையென்றால் அவள் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவை

இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.4,50,000 ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் மாதேவனால் இவ்வளவு பெரிய தொகை திரட்டுவது என்பது இயலாத காரியம் ஆகும். தற்போதைய மருத்துவ பரிசோதனை சிகிச்சைகளுக்காக தங்களால் இயன்ற அளவு கடன் வாங்கி செலவு செய்துவிட்டனர்.

heart disease Krishnagiri heart defect surgery

இதனால், மகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோருவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. எல்லா குழந்தைகளைப் போல இந்த பூமியில் சிறகுகள் விரித்து பெரிய உயரத்தை எட்ட வேண்டும் என்றால் மாதேவனின் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது அவசியம் ஆகும். அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்

எனவே, இந்த பச்சிளம் குழந்தையின் உயிர் காக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சிறிய தொகை, பெரிய தொகை என்றெல்லாம் இல்லை. நீங்கள் செய்யும் உதவி எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது குழந்தையின் உயிரை காக்க உதவும். எனவே உங்களால் முடிந்த உதவியை உடனே செய்யுங்கள் ப்ளீஸ்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+