என்னாது சொகுசு பங்களாவா?.. சொந்த வீடு கூட எங்களுக்கு இல்லை.. வாடகை வீடுதான்.. பப்ஜி மதன் மனைவி!
சென்னை: எங்களுக்கு சொந்த வீடு கூட இல்லை. வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம் என பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Recommended Video
3 யூடியூப் சேனல்களை நடத்தி வந்த பப்ஜி மதன், ஆன்லைனில் விளையாடிய போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் தருமபுரிக்கு தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்டார்.
இவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார். தன் கணவரை தூண்டி விட்டு ஆபாச வார்த்தைகளை பேச வைத்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார்.

சொகுசு பங்களாக்கள்
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் எங்களுக்கு சொகுசு பங்களாக்கள், கார்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்களுக்கு தங்குவதற்கு சொந்தமாக வீடு கூட இல்லை. நாங்கள் இருப்பது வாடகை வீடு.

வாடகை வீட்டில்
சொந்த பங்களா இருந்தால் நாங்கள் ஏன் வாடகை வீட்டில் தங்க வேண்டும்? அது எங்களிடம் ஆடி கார் மட்டும்தான் இருக்கிறது. சொகுசு கார்கள் ஏதும் இல்லை. சொகுசு கார் வாங்கும் அவசியமும் இல்லை. அப்படியிருக்கிறதென்றால் அதற்கு ஆதாரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

ஆடி கார்
சொகுசு கார் இல்லாவிட்டால் ஆடி கார் சொகுசு கார் இல்லையா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கிருத்திகா எங்கள் வீட்டு வாசலில் நிறுத்திய கார்கள் எல்லாம் எங்கள் வீட்டு கார் ஆகிவிடமுடியுமா? என்றார்.

கார்களுடன் போட்டோ
அதற்கு நிருபர்கள், நீங்கள்தானே அந்த கார்களுடன் நின்று போட்டோ எடுத்து போட்டுள்ளீர்கள் என்றனர். மேலும் தனது கணவர் மீது பணமோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை என் கணவர் யாரையும் ஏமாற்றியதாக யாரும் புகார் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications