Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டிப் பூசல் புதிதல்ல! தலைமைக்கும் அது தெரியும்! கே.எஸ்.அழகிரி ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டிப் பூசல் ஒன்றும் புதிதல்ல என்றும் இதனால் கோஷ்டிகள் கூறும் புகார்களை வைத்தெல்லாம் தலைமை எந்த முடிவும் எடுக்காது எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

டெல்லி புறப்பட்ட சோனியா: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அழகிரி இதனைக் கூறினார். தன்னை பொறுத்தவரை கோஷ்டிகளில் பெரிதாக எந்த நம்பிகையும் இல்லை என்றும் இன்று ஒன்று பேசுபவர் நாளை ஒன்று பேசுவார், நாளை ஒன்று பேசுபவர் நேற்று ஒன்று பேசியிருப்பார் இதனால் கோஷ்டிகள் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றார்.

KS Azhagiri has said that factional conflict is nothing new to the Congress party

பாஜக வளர்ந்துவிட்டதா? : தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து விட்டதாக பாஜகவினரே சொல்வதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சில நண்பர்கள் தான் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என கூறுகிறார்கள் என்றும் அதற்கான காரணம் தமக்கு புரியவில்லை எனவும் கூறினார். நேற்றைய தினம் ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சோனியா காந்தியிடம் நேரடியாக கே.எஸ்.அழகிரி பற்றி முறையிட்டார்.

இளங்கோவன் மீது பாய்ச்சல்: அத்தோடு விடாமல் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என்றும் இதனை நாம் ஒப்புக் கொண்டுத் தான் ஆக வேண்டும் எனவும் பேசியிருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் இளங்கோவன் பெயரை குறிப்பிடாமல் தனது மொத்தக் கோபத்தையும் கொட்டித்தீர்த்திருக்கிறார் அழகிரி. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பதாக கூறுவது விசித்திரமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

குழந்தைத் தலைவர்: செய்தியாளர்கள் சந்திப்பின் போது மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனே இப்படிச் சொல்லியிருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இருக்கட்டும் யாராக இருந்தால் என்ன மூத்த தலைவரோ, குழந்தை தலைவரோ யார் சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இளங்கோவனை கலாய்த்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து கே.எஸ். அழகிரியை மாற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைமையை பொறுத்தவரை கோஷ்டிப்பூசலை முழுமையாக அறிந்து வைத்திருப்பதால் எடுத்தோம், கவிழ்த்தோம் என எந்த முடிவையும் எடுத்துவிடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+