குஜராத்துக்கு மட்டும் மோடி பிரதமரல்ல... விமர்சிக்கும் தமிழக காங்.கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி..!
சென்னை: கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக மட்டும் மோடி செயல்படுகிறார் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''கொரோனா தொற்று பரவியது முதற்கொண்டு அதை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தெளிவற்ற கொள்கைகளை பா.ஜ.க. நடைமுறைப்படுத்தி வருகிறது.
தடுப்பூசி கொள்கையைப் பொறுத்தவரை எந்த அடிப்படையில் மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களுக்கு சலுகையும், மற்ற மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய தடுப்பூசி காலம் தாழ்ந்தும் அளிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றினால் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பிரதமர் மோடி, தனது சொந்த மாநிலத்திற்கு சலுகை காட்டுவது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல.
இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையைத் தவிர்த்து தடுப்பூசி விநியோகத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு தெளிவான கொள்கையை வகுத்து தடுப்பூசி விநியோகத்தை சீரமைக்க வேண்டும்.
இரண்டு மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கு புரியும். இத்தகைய அணுகுமுறையை பிரதமர் மோடி கையாளுவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கிற செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக மட்டும் செயல்படாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சமநிலைத் தன்மையோடு அணுகுகிற பிரதமராக மோடி செயல்பட வேண்டும். இதுவே கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications