சீமான் ஏன் எங்களை ஆதரிக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.. சீரியசாக எடுக்க வேண்டாம்.. அண்ணாமலை பளீர்
சென்னை: சீமான் ஏன் பாஜகவை ஆதரிக்கிறார் என அனைவருக்கும் தெரியும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் கேடி ராகவனின் வீடியோ சர்ச்சை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் சீமான் கருத்து தெரிவித்து இருந்தார். கேடி ராகவனின் பாலியல் ரீதியான வீடியோ சர்ச்சையான நிலையில், ராகவனுக்கு ஆதரவாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்தார்.
சீமான் இது தொடர்பாக அளித்த பேட்டியில், கேடி ராகவன் விவகாரம் தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று. தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதுதான் சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்.

குற்றம்
இதெல்லாம் ஒரு சமூக குற்றமா? உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி ராகவன் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம் பிடிப்பது குற்றம். அந்த வீடியோவை வெளியே விடுவதும் குற்றம். அவருடைய அனுமதி இல்லை வீடியோ எடுப்பது தவறு. அவருடைய படுக்கை அறைக்கு, கழிவறைக்கு சென்று வீடியோ எடுப்பது எப்படி சரியாகும்.

கேள்வி
என்ன நடக்கிறது? வீடியோ எடுத்து அதை வெளியிட்டவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபைக்கு உள்ளே ஆபாச காட்சிகளை பார்ப்பது தவறு. அப்படி ஏதாவது நடந்தால் தவறு. நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் செய்ததை ரெக்கார்ட் செய்து வெளியிடுவது தவறு, என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார்.
Recommended Video

அண்ணாமலை
இந்த நிலையில் சீமான் ஏன் பாஜகவையும் கேடி ராகவனையும் ஆதரிக்கிறார் என்று செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார்கள். சீமான் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, சீமான் ஏன் கேடி ராகவனையும், பாஜகவையும் ஆதரிக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். சீமான் பேச்சை சீரியஸாக்க வேண்டாம்.

அண்ணாமலை சீமான்
சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அவர் பேட்டியை நான் கேட்பேன், நகைச்சுவையை ரசித்துக்கொள்வேன். கடந்து செல்வேன். சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும் என்று அண்ணாமலை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications