Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Abirami: கோயம்பேட்டில் ட்விஸ்ட்! டூவிலரை பார்க் செய்த பிரியாணி அபிராமி! 2018ல் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற குன்றத்தூர் அபிராமி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம். மேலும் வழக்கில் நடந்த முக்கிய திருப்பங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை குன்றத்தூரில் உள்ள விஜய் எனும் தனியார் வங்கி ஊழியரின் மனைவிதான் அபிராமி. இவர்களுக்கு அஜய் (7), கார்னிகா (4) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். விஜய், தனது மனைவி, குழந்தைகளை அவ்வப்போது வெளியே அழைத்துச் செல்வது வழக்கம்.

kundrathur abirami court

அந்த வகையில் அவர்கள் அடிக்கடி வீட்டருகே இருக்கும் உணவகத்திற்கு சென்று பிரியாணி சாப்பிடுவது வழக்கமாம். இங்கு பிரியாணி பிடித்து போனதால், கணவர் இல்லாத நேரத்திலும் அபிராமி, கடைக்கு போன் செய்து ஆர்டர் செய்வாராம்.

அந்த பிரியாணியை அபிராமி வீட்டிற்கு டோர் டெலிவரி செய்வது சுந்தரம் என்பவராம். இதனால் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டதால் நெருக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது.

இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் அபிராமி வீட்டிற்கு தெரிந்து அவர்கள் அபிராமிக்கு, குழந்தைகளை காட்டி அறிவுரை கூறினராம். இதனால் குழந்தைகளை கொன்றுவிட முடிவு செய்து, அவர்களுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொண்டு கொன்றுள்ளார். இந்த வழக்கில் கைதான அபிராமிக்கு இன்று காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.

செப்டம்பர் 1,2018: குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜய், தனது மனைவி அபிராமி, குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டதாக புகார் அளித்தார்.

செப்டம்பர் 2, 2018: நாகர்கோவிலில் வைத்து குன்றத்தூர் அபிராமி கைது

செப்டம்பர் 26, 2018: சிறையில் அபிராமி சரியாக சாப்பிடாமல் அழுதபடியே இருந்தார். அவர் மயங்கியும் விழுந்ததாக செய்திகள் வந்தன

அக்டோபர் 7,2018: புழல் சிறையில் மனவேதனையில் இருந்த அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்தன

டிசம்பர் 20, 2018: அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

டிசம்பர் 21, 2018: அபிராமிக்கு எதிரான குற்றப்பத்திரிகை 200 பக்கங்களுடன் தாக்கல் செய்யப்பட்டது

ஜூலை 24, 2025: இந்த வழக்கில் காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அபிராமியும் சுந்தரமும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+