தலையில் கிளிப், பளபள நெயில் பாலிஷ்! கவலையே இல்லாமல் நீதிமன்றம் வந்த குன்றத்தூர் அபிராமி
சென்னை: கள்ளக்காதலனுக்காக 10 மாதம் சுமந்து பெற்ற இரு குழந்தைகளையும் ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்காக, காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட குன்றத்தூர் அபிராமி, கை விரல் நகங்களில் நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டு கவலையே இல்லாமல் வந்திருந்ததை யாராவது கவனித்தீர்களா?
கோர்ட்டுக்கு வந்த அபிராமி, கருப்பு நிற சுடிதார் அணிந்துக் கொண்டு வந்திருந்தார். முகத்தை மறைப்பதற்காக கருப்பு நிற துப்பட்டாவை முகத்தில் கட்டியிருந்தார். தீர்ப்பு என்ன வரும் என்பதை அறிய பதற்றமாகவே இருந்தார். அவ்வப்போது அவர் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார்.

இந்த நிலையில் "குழந்தையை பராமரிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தாயே, சுயலாபத்திற்காக இப்படி கொலை செய்துள்ளது கொடூரம்" என குறிப்பிட்ட காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், அபிராமியும், சுந்தரமும் குற்றவாளிகள் என அறிவித்தார்.
சாகும் வரை ஆயுள்
மேலும் இருவருக்குமான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் சாகும் வரை ஆயுள் சிறை என அறிவித்தார். நீதிபதி செம்மல் அறிவித்தாலும் அறிவித்தார், அபிராமி குலுங்கி குலுங்கி அழுதார்.
பெஞ்சில் அமர வைத்த காவலர்கள்
அவரை அங்கிருந்த காவலர்கள் ஒரு பெஞ்சில் அமர வைத்தனர். அப்போது பெண் காவலர் மீது சாய்ந்தபடியே அழுதார். பெண் காவலர்களும் மனிதாபிமான அடிப்படையில் அவரை தேற்றினர். அவருக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்தனர். அது போல் சுந்தரமும் கதறி அழுதார். அவரை ஆண் காவலர்கள் தேற்றினர்.
மனிதாபிமானம்
இருவரும் கொடூர குற்றவாளிகளாக இருந்தாலும் அந்த இடத்தில் போலீஸாரின் மனிதாபிமானம் பெரிதும் பேசப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, அபிராமி தலையை கீழே குனிந்தபடியும் முகத்தை மூடியபடியும் அழுத போது ஒரு விஷயத்தை கவனித்தீர்களா?
தலையில் கிளிப்
தலையில் டிக்டாக் கிளிப் இரண்டு அணிந்திருந்தார். இரு பக்கமும் காதோர முடியை சிறிதளவு எடுத்து அதை நடுமண்டையில் கிராஸ்ஸாக பிடித்து இந்த கிளிப்புகளை செருகி pony tail போட்டிருந்தார். அது போல் அவரது கை விரல் நகங்களில் nail polish பூசப்பட்டிருந்தது.
சிறையில் சோதனை
பொதுவாக சிறைச்சாலைக்கு செல்லும் ஆண், பெண் என தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். அது போல் அவர்கள் சிறையில் அசம்பாவிதங்களில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக அவர்களை முற்றிலும் சோதனையிட்டுத்தான் சிறைக்குள் அனுப்புவார்கள்.
நகப்பூச்சு
குற்றம் செய்துவிட்டதை நினைத்து, கூர்மையான ஆயுதங்களை கொண்டு, தங்களை தாங்களே வருத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக இது போன்ற நடவடிக்கை உள்ளது. அப்படியிருக்கும் போது விஷத்தன்மை கொண்ட நகப்பூச்சுகளை (nail polish) அபிராமி வைத்துக் கொண்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூர்மையான கிளிப்
அது போல் டிக் டாக் கிளிப்பின் அடிபாகம் கூர்மையாக இருக்கும். அதையும் அவர் எப்படி அணிந்திருந்தார் என தெரியவில்லை. கையில் பளபளவென நெயில் பாலிஷ், தகதக என மின்னும் கிளிப்புடன் இவர் வந்ததை பார்த்தால் குழந்தைகளை கொன்றதற்கான குற்ற உணர்ச்சியே இவருக்கு இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
எல்லாம் நடிப்பா
அது போல் இவர் முகத்தை மூடிக் கொண்டு அழுததெல்லாம் நடிப்பா என்றும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் விஷத்தன்மை கொண்ட நெயில் பாலிஷுக்கு சிறைக்குள் அனுமதி இருக்கிறதா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதே வேளை, கைகளில் வளையல், காதுகளில் தோடு இல்லாமல் இருந்தார் அபிராமி.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications