தம்பி.. எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க.. நிருபரிடம் ஆவேசமான குஷ்பு.. என்ன நடந்தது?
சென்னை: தம்பி எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க என்று நிருபரை பார்த்து, எரிச்சலுடன், கேள்வி எழுப்பினார் குஷ்பு.
காங்கிரசிலிருந்து திடீரென ராஜினாமா செய்துவிட்டு, நேற்று பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு. இதையடுத்து இன்று தமிழக பாஜக தலைமையகமான கமலாலயம், வருகை தந்தார் குஷ்பு.
அப்போது மகளிரணியினர், அவருக்கு ஆரத்தி எடுத்தனர். வெற்றி திலகம் வைத்தனர். தலை மீது பூ தூவி வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

குஷ்பு பிரஸ் மீட்
இதன்பிறகு கமலாலயம் உள்ளே செய்தியாளர்களை சந்தித்தார் குஷ்பு. அப்போது சற்று ஆவேசமாக, காணப்பட்டார் குஷ்பு. பல்வேறு விஷயங்களை பேட்டியில் பேசினார் குஷ்பு. தான் ஏன் பாஜகவில் இணைந்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். மோடி முத்தலாக் சட்டம் கொண்டு வந்தபோது காங்கிரசிலிருந்தும் வாழ்த்தினேன். 120 கோடி மக்கள் ஒரு தலைவரை திரும்பவும் தேர்ந்தெடுத்து பிரதமராக்கியுள்ளார்கள் என்றால் அவர் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றார் குஷ்பு.

எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க?
அப்போது ஒரு நிருபர், நீங்கள், பாஜகவில் சேர காரணம், உங்கள் கணவர் சுந்தர்.சி என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி சொன்னாரே? என்று கேள்வி எழுப்பினார். இதனால் மேலும் ஆவேசமானார் குஷ்பு. தம்பி நீங்க எத்தனை வருஷமா பிரஸ்ல இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த நிருபர், அழகிரி சொன்னதைத்தான் கேட்கிறேன் என்றார்.

கேவலமான சிந்தனை
ஆனாலும் விடாத குஷ்பு, "சும்மா சொல்லுங்க.." என்றார். அதற்கு அந்த நிருபர், 10 வருடங்கள் என்றார். உடனே குஷ்பு, எனது அரசியல் பயணம் ஆரம்பித்தே 10 வருஷம் ஆகிவிட்டது. இதுவரை எந்த அரசியல் நிகழ்ச்சியிலாவது என்னையும், கணவர் சுந்தரையும் சேர்த்து பார்த்துள்ளீர்களா. கிடையாது. ஆனாலும், அவர்கள் புத்தி எப்படி போகிறது?. கணவரால் வலியுறுத்தப்பட்டு கட்சி மாறினேன் என்கிறார்கள். வெறும் நடிகையாகத்தான் மக்கள் என்னை பார்த்தார்கள் என்கிறார்கள். இதெல்லாம், அவர்கள் சிந்தனை எவ்வளவு கேவலமானது என்பதன் அடையாளம்.

மக்கள் நாடித்துடிப்பு
தமிழகத்தில் எனக்கு முன்பாக பாஜகவில் உழைத்து வருகிறார்கள். அவர்கள்தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள். என்னைவிட அவர்களுக்குத்தான் பாஜக ஆதரவாளர்கள், மக்களின் நாடித்துடிப்பு தெரியும். நான் உடனே போட்டியிட போவதாக கூற முடியாது. அது சீனியர் தலைவர்கள் முடிவு. இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

குஷ்பு அதிருப்தி
குஷ்பு திமுகவில் கருணாநிதி முன்னிலையிலும், காங்கிரசில் சோனியா காந்தி முன்னிலையிலும் இணைந்தார். ஆனால் பாஜகவில் அக்கட்சி தலைவர் ஜேபி நட்டா அதே அலுவலகத்தில் இருந்தபோதிலும், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் குஷ்பு இணைக்கப்பட்டார். இதனால் குஷ்பு தரப்பில் அதிருப்தி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் இன்றைய பிரஸ் மீட்டில் ஆவேசம் காட்டினார்.
-
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications