நிறுவன நாளும் அதுவுமாக.. பாஜக கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பு.. பதறிப்போன தொண்டர்கள்
சென்னை: பாஜக ஸ்தாபன நாளையொட்டி இன்று சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் கொடியை தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு ஏற்றினார். அப்போது பாஜக கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது. இதையடுத்து அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் ஸ்தாபன நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சி அலுவலகங்களில் பாஜக தலைவர்கள் கட்சி கொடி ஏற்றி வருகின்றனர்.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பாஜக ஸ்தாபன நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கொடியை தலைகீழாக ஏற்றிய குஷ்பு
இதன் ஒருபகுதியாக சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பாஜக கொடியை ஏற்றினார். அப்போது அவர் பாஜக கொடியை தலைகீழாக ஏற்றினார். இதையடுத்து குஷ்பு அங்கிருந்து சென்ற நிலையில் கொடியை கீழ் இறக்கிய நிர்வாகிகள் அதை சரிசெய்து மீண்டும் நேராக ஏற்றினர். முன்னதாக குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெருமையா இருக்கு...
பாஜக தொண்டராக கொடியேற்றுவது பெருமையாக உள்ளது. கட்சி துவங்கியது முதல் இன்று வரை மக்கள் பாஜக மீது நம்பிக்கையுடன் உள்ளனர். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜக கொடி இருக்கிறது. ஏதாவது வேலை செய்வதாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதால் திமுகவினர் ஆளுனருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்கின்றனர்.

கஷ்டமான விஷயம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு கஷ்டமான விசயம்தான், ஆனால் உலகம் முழுவதும் பெட்ரோல் விலை உயர்கிறது. கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை உயர்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும்போது விலையை உயர்த்த கூடாது என்றுதான் நினைப்பார்கள். ஆனால் உக்ரைன்-ரஷ்யா போரால் கச்சஎண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதுதான் விலை உயர்வுக்கு காரணம். இந்தியாவில் மட்டும் விலை உயரவில்லை. அனைத்து நாடுகளிலும் விலை அதிகரித்து வருகிறது.

மார்ச் 8 ல் ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது, இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. புதிய தொழில்கள் தொடங்கப்படுகின்றன. ஆளுங்கட்சியாக இருப்பதால் காவல்துறை திமுகவிற்கு சாதகமாக உள்ளது. தமிழக அரசு சொத்து வரியை 150 விழுக்காடு உயர்த்தியது தவறு. மார்ச் 8ல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்

பாடம் புகட்டுவோம்
திமுக மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றி தங்களது திட்டங்களாக கூறி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால் நல்லது நடந்தால் அதை தங்களது திட்டம் என்று கூறிக்கொள்கின்றனர் , ஆனால் சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசை காரணம் சொல்கின்றனர். திமுக தலைமையில் அமைந்த புதிய அரசின் 6 மாத தேனிலவு காலம் முடிந்துவிட்டது. இனி திமுகவிற்கு, பாஜக பாடம் புகட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு











Click it and Unblock the Notifications