அடிச்சு தூக்கும் லீமா ரோஸ்? சட்டசபைக்கு செல்லும் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்? பரபரப்பு சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், அரசியல் நோக்கர்களின் பார்வை முழுவதும் திருச்சி மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட தொகுதியின் மீது பதிந்துள்ளது. அதுதான், இந்தத் தேர்தலின் மிக முக்கியமான 'ஹாட் ஸ்பாட்' ஆக மாறியுள்ள லால்குடி தொகுதி.

இங்கு நிலவும் கடும் போட்டி மற்றும் வாக்காளர்களின் மனநிலை குறித்து விரிவான கள ஆய்வு செய்த 'மின்னம்பலம்' ஊடகம், தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த முடிவுகளின்படி, லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

tamil nadu assembly elections 2026 edappadi palanisamy

வாக்கு சதவிகிதம்: ஒரு நூலிழைப் போட்டி

மின்னம்பலம் வெளியிட்டுள்ள கணிப்பின்படி, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் 35 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருப்பார் எனத் தெரிகிறது. அவரைத் துரத்தும் திமுக வேட்பாளர் டி. பாரிவள்ளல் 34 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

புதிதாகத் தேர்தலைச் சந்தித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் 21 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மதன் 9 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்று அந்த கணிப்பு தெரிவிக்கிறது. ஒரு சதவீத வாக்கு வித்தியாசம் என்பது மிகக் குறுகிய ஒன்றாகத் தெரிந்தாலும், தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிகிறது.

கவனம் ஈர்க்கும் லீமா ரோஸ் மார்ட்டின்

இந்தத் தொகுதியின் மீது இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு உருவாக முக்கியக் காரணம், 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக சார்பில் களம் இறங்கியிருப்பதுதான். ஆரம்பத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்த லீமா ரோஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டார். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவரது முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தின் பெரும் கோடீஸ்வர வேட்பாளர்

வேட்புமனுத் தாக்கலின் போது லீமா ரோஸ் சமர்ப்பித்த சொத்து விவரங்கள் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையே மலைக்க வைத்தன. தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக அவர் உருவெடுத்துள்ளார். அவரது பெயரில் மட்டுமே சுமார் 139.62 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட 909.94 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுக்கு அதிபதியாக, மற்ற வேட்பாளர்களை நிதி பலத்தில் வெகுதூரம் பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் இருக்கிறார் லீமா ரோஸ். தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் காட்டிய வேகம் மற்றும் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி ஆகியவை அவருக்குச் சாதகமாக மாறியுள்ளதாகக் கருதப்படுகிறது.

சவால்களை முறியடிக்குமா அதிமுக?

லால்குடி தொகுதி பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே வெற்றி பெற்ற தொகுதியாகும். இங்கு திமுக வேட்பாளர் டி. பாரிவள்ளல் மிகக் கடுமையான சவாலை அளித்து வருகிறார். அதேசமயம், தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் கணிசமான வாக்குகளைப் பிரிப்பது திமுகவிற்கா அல்லது அதிமுகவிற்கா என்ற குழப்பம் நிலவியது. மின்னம்பலத்தின் கணிப்பின்படி, வாக்குகளின் பிரிப்பு ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சியான அதிமுகவிற்கே சாதகமாக முடிந்துள்ளதை உணர்த்துகிறது.

சாண்டியாகோ மார்ட்டின் மீதான விமர்சனங்கள், லீமா ரோஸின் கட்சி மாற்றம் போன்றவற்றைத் தாண்டி, தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அதிமுகவின் வாக்குறுதிகள் லீமா ரோஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என நம்பப்படுகிறது.

மின்னம்பலத்தின் இந்தக் கணிப்பு நிஜமாகுமா அல்லது கடைசி நேரத்தில் திமுக நூலிழை வெற்றியைப் பெறுமா என்பது வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிந்துவிடும். எது எப்படியோ, லீமா ரோஸ் மார்ட்டின் என்ற தனிநபரின் வருகை லால்குடி தொகுதியைத் தமிழகத்தின் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதியாக மாற்றியுள்ளது மறுக்க முடியாத உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+