தாய் பத்திரம்.. சனிக்கிழமை பத்திரப்பதிவு ரத்து? அதைவிடுங்க.. மூர்த்தி போட்ட போடு.. நடுங்கிய ஆபீசர்ஸ்
சென்னை: சென்னை மற்றும் கோவையில் நில வழிகாட்டி மதிப்பு உயர உள்ளதாக அமைச்சர் மூர்த்தி அறிவித்திருந்த நிலையில், பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?
பதிவுத்துறை சார்பில், பதிவு நடைமுறைகள் குறித்து, நேற்றைய தினம், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை செயலர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: "சென்னையில் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு குறைவாக இருக்கிறது. சதுர அடி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.15 ஆயிரமாக இருக்கிறது. அதனால், வழிகாட்டி மதிப்பு மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை பதிவுக்கான நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். நிலம், வீடு ஆகியவற்றின் மொத்த மதிப்பு அடிப்படையில், அடுக்குமாடி திட்ட வீடுகளின் பத்திரங்களை பதிவு செய்ய, புதிய நடைமுறையை உருவாக்கி வருகிறோம்" என்றார்.
பதிவுத்துறை: இதையடுத்து, பதிவுத்துறை பணி அலுவலர் சங்கம், பதிவுத் துறை அலுவலர் சங்கம், சார் பதிவாளர் சங்கம், பதிவுத் துறை அமைச்சு பணியாளர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ஆலோசனை நடத்தினார்.. அப்போது, பதிவுத் துறை செயலர் ஜோதிநிர்மலா சாமி, ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது பேசிய சங்க நிர்வாகிகள், "பொது இடமாறுதல் வழங்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகங்களில் அடிப்படை பணியாளர்களை நியமிக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களை மறுபடியும் பணியில் சேர்க்க வேண்டும்.. சனிக்கிழமை பத்திரப்பதிவு பணியை ரத்து செய்ய வேண்டும்" என்றெல்லாம் நிறைய கோரிக்கைகளை அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
டிரான்ஸ்பர்ஸ்: இதற்கு அமைச்சர் மூர்த்தி அவர்களிடம் சொன்னதாவது: தமிழகம் முழுவதற்கும், ஒரு வழிமுறையை பின்பற்றி தான் டிரான்ஸ்பர்கள் தரப்படுகிறது.. இதில் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
"இனி நாங்கள் யாருமே லஞ்சம் வாங்க மாட்டோம்" என்று இங்கு வந்திருக்கும், சங்க நிர்வாகிகள் யாராவது பகிரங்கமாக அறிவிக்க தயாரா? அப்படி நீங்கள் அறிவித்தால், கேட்கும் இடத்துக்கு டிரான்ஸ்பரை உடனே வழங்குகிறோம்.. முந்தைய ஐ.ஜி., சிவன் அருள் இருந்தபோது, நான்கு மாவட்ட பதிவாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆராயப்பட்டு, அவைகள் திரும்ப பெறப்படும். ஆனால், லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட, சஸ்பெண்ட் நடவடிக்கைகளை ஒருக்காலும் திரும்ப பெற முடியாது.
கதிகலங்கிய ஆபீசர்ஸ்: என்னமோ, ஐஜி ஆபீஸ் வந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று சிலர் அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. முடிந்தால் போராட்டம் நடத்தி பாருங்களேன்.. அதனுடைய விளைவுகள், பின்னாடி தெரியவரும்" என்று கறாராக சொல்லிவிட்டார் மூர்த்தி.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications