மனைவியின் உடல் இருக்கும் இடத்திலேயே நல்லடக்கம்.. மறைந்த நடிகர் ராஜேஷின் தம்பி உருக்கம்!
சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளாக 150க்கும் மேற்பட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலமாக அறிமுகமான ராஜேஷ், கன்னிப் பருவத்திலே படத்தின் மூலமாக நாயகனாக நடித்தார்.
அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் காமராஜ் என்ற கதாபாத்திரத்தில் ஆசிரியராக நடித்திருப்பார். உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
திமுக மீது அதிக பற்று கொண்ட அவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் ராஜேஷ் இறப்பு தொடர்பான செய்தியாளர்களை சந்தித்து அவரது சகோதரர் பேசுகையில், அவர் சகலமும் தெரிந்தவர்தான். இலக்கண, இலக்கியத்தை படித்திருக்கிறார். எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர். சரியான அட்வைஸ் கொடுப்பார்.
உடல்நிலை சரியில்லை
அப்படி இருப்பவர், தன்னுடைய உடலையும் நன்றாகவே கவனித்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திடீரென அட்டாக் வந்து, கோவையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னரும் தினமும் உடற்பயிற்சி செய்யக் கூடியவர். ஆனால் கடந்த 2 நாட்களாக அவர் கொஞ்சம் சோர்ந்து காணப்பட்டார். மாலையில் கொஞ்சம் விரைவாக தூங்க சென்றார். பின் காலையில் எழுந்து, நாடித்துடிப்பு பார்க்க வேண்டும் என்று கூறினார்.
மருத்துவமனை செல்லும் வழியில்
பின்னர் உடல் சுகம் இல்லை.. மருத்துவமனை செல்லலாம் என்றார். நடக்க முடியவில்லை.. மயக்கம் வருவது போல் உள்ளது என்றார்.. ஆம்புலன்ஸில் ஏற்றிய போதே, அவரின் கண்கள் சொருகிவிட்டது. ஆம்புலன்ஸ் பாதி தூரம் சென்ற போதே, அவர் இறந்துவிட்டார். அவர் பேசாத நிமிஷங்களே இல்லை என்று சொல்லலாம். ராஜேஷ்னாலே பேசி கொண்டே இருப்பார் என்று நடிகர் ராதாரவி கிண்டலாக கூறுவார்.
கனடாவில் இருக்கும் மகள்
கடந்த 3 மணி நேரமாக பேசாமல் இருக்கிறார். வாய் மூடி, கண்கள் மூடி படுத்திருப்பது சோகமாக உள்ளது. எல்லோருடனும் நட்புடன் பழகக் கூடியவர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். ராஜேஷின் மகள் கனடாவில் குடும்பத்துடன் உள்ளார். இன்னும் சில நெருங்கிய உறவினர்கள் துபாய் மற்றும் மஸ்கட்டில் இருக்கிறார்கள்.
தாய், தந்தை, மனைவி கல்லறை
அவர்கள் வருவதற்கு 48 மணி நேரமாகும். அதனால் இறுதிசடங்கு 2 நாட்களுக்கு பின்னரே நடக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் தாய், தந்தை கல்லறை உள்ளது. அதற்கு மேல் அண்ணனின் மனைவி கல்லறை உள்ளது. அதற்கு மேல், அண்ணனின் உடலை வைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications