கிரேஸி மோகன் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.. நடிகர் கமல் இரங்கல்
சென்னை: நாடக கலைஞர், வசனகர்த்தா என பன்முக திறமை கொண்ட மறைந்த கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் இருந்து முக்கியமான கலைஞர்களில் ஒருவர் கிரேஸி மோகன்.. நாடக கலைஞர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர் இவர்.

மேலும், திரைத்துறையில் கமல்ஹாசனுடன் நெருங்கிய நட்பிலிருந்தவர் கிரேஸி மோகன்.. கமலுக்கு இவர் வசனம் எழுதிய படங்களை இப்போது பார்த்தாலும் சிரிப்பு நிற்காமல் வரும்.
அப்படி பன்முக கலைஞராக இருந்த கிரேஸி மோகன் கடந்த 2019 ஜூன் 10-ந்தேதி காலமானார். கிரேஸி மோகன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அப்போது கமல் உடனேயே இருந்தார்.
மேலும், அவரது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கமல், தனது நண்பருக்குப் பிரியாவிடை கொடுத்தார். இதனிடையே இன்று கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.
இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications