கிரேஸி மோகன் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.. நடிகர் கமல் இரங்கல்
சென்னை: நாடக கலைஞர், வசனகர்த்தா என பன்முக திறமை கொண்ட மறைந்த கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் இருந்து முக்கியமான கலைஞர்களில் ஒருவர் கிரேஸி மோகன்.. நாடக கலைஞர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர் இவர்.

மேலும், திரைத்துறையில் கமல்ஹாசனுடன் நெருங்கிய நட்பிலிருந்தவர் கிரேஸி மோகன்.. கமலுக்கு இவர் வசனம் எழுதிய படங்களை இப்போது பார்த்தாலும் சிரிப்பு நிற்காமல் வரும்.
அப்படி பன்முக கலைஞராக இருந்த கிரேஸி மோகன் கடந்த 2019 ஜூன் 10-ந்தேதி காலமானார். கிரேஸி மோகன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அப்போது கமல் உடனேயே இருந்தார்.
மேலும், அவரது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கமல், தனது நண்பருக்குப் பிரியாவிடை கொடுத்தார். இதனிடையே இன்று கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் காலமானார்.
இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications