ரூ.150 கோடிக்கு விற்பனை.. விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வாங்கியது யார்?
சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தொடங்கிய ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த கல்லூரி விற்பனை செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் அந்த கல்லூரியை வாங்கியது யார் என்பது குறித்து பார்க்கலாம்.
சினிமா, அரசியலில் மிகப்பெரிய சாதனைகளை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் படைத்துள்ளார். அவர் உடல்நிலை பிரச்சனை காரணமாக உயிரிழந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், தேமுதிகவை அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக மகன் விஜய பிரபாகரன் செயல்பட்டு வருகிறார்.

2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். அதன்பின் மீண்டும் அப்படியொரு வெற்றியை தேமுதிக அடையவில்லை. தற்போது மீண்டும் தேமுதிகவை அதே இடத்திற்கு கொண்டு செல்லவே பிரேமலதா விஜயகாந்த் செயல்பட்டு வருவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் கட்டிய கல்லூரி ஒன்றை அவரின் குடும்பத்தினர் விற்பனை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையை அடுத்த மாமண்டூரில் விஜயகாந்த் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை உருவாக்கினார். விஜயகாந்தின் தாய் மற்றும் தந்தையின் பெயரில் தொடங்கப்பட்ட கல்லூரியில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என்று ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.
தொடக்கத்தில் கல்லூரி தொடங்க விரும்பாத விஜயகாந்த், அவரது குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாகவே இந்த கல்லூரியை ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் சகோதரர் சுதீஷ் நிர்வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரியை நிர்வகிப்பதில் சில சிக்கல்களை விஜயகாந்த் குடும்பத்தினர் எதிர்கொண்டு வந்துள்ளனர். இதனால் கல்லூரியை பிரபல தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்திடம் விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. கல்லூரியை ரூ.150 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சுமார் 75 ஏக்கரில் தொடங்கப்பட்ட ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரியில், பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் 7 பிரிவுகளுக்கும், முதுகலைப் படிப்புகளில் 4 பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி இருந்தது. இந்த கல்லூரியை வாங்கியதில் இருந்து தனலட்சுமி சீனிவாசம் குழுமம் தொடர்ச்சியாக பல்வேறு விளம்பரங்களையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications