விஜய் மீது பாயும் சட்ட நடவடிக்கை? தமிழக டிஜிபிக்கு குழந்தைகள் நல ஆணையம் வைத்த பரிந்துரை
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மற்றும் அவரது பிரச்சார குழுவினர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் அதாவது JJ Act, 2015 இன் பிரிவு 70 மற்றும் 8-ன் கீழ், டிஜிபி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விஜய் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆணையம் தனது பரிந்துரையை வைத்துள்ளது.
எனவே, JJ act சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் விஜய் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதால் இந்த விவகாரம் விஜய்க்கு புதிய தலைவலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

விஜய்யின் தவெக
தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டுள்ளது. வரும் 3 மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. முன்னதாக தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது குழந்தைகளை கவரும் விதமாக பேசியிருந்தார். மேலும் குழந்தைகள் தன் அம்மா, அப்பாவிடம் அடம்பிடித்து விசிலுக்கு ஓட்டு போட சொல்லுங்கள் என்பது போல் பேசியிருந்தார்.
விஜய் பேசுகையில், "உங்களுக்கு ஏதாவது வேணும்னா அடம்பிடிச்சு அதை சாதிக்கிறீங்கல்ல.. அதே மாதிரி இந்த விஜய் மாமா ஜெயிக்கறதுக்காக உங்க வீட்டுல இருக்குற பெரியவங்களை, அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் எல்லாரையும் விசிலுக்கு ஓட்டுப்போட வைங்க.. " என பேசியிருந்தார். விஜய் இப்படி பேசிய வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆகின.
விஜய்யின் இந்த வீடியோவை பார்த்த குழந்தைகள் பலரும் விசிலுக்கு ஓட்டு போட வலியுறுத்தி தாய், தந்தைகளிடம் நச்சரித்ததையும் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் விஜய்க்கு ஆதரவாக குழந்தைகளே பேசிய வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணைய விதிகளின்படி குழந்தைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் செயல்பாடுகளில் பயன்படுத்த கூடாது..
தேர்தல் நடத்தை விதி மீறல்
ஆனால் இந்த விதியினை மீறி விஜய் நேரடியாகவே குழந்தைகளிடம் வாக்கு சேகரித்து தேர்தல் நடத்தை விதி மீறல் என்று பலரும் குற்றச்சாட்டு வைத்தனர். அதுமட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் விஜய் கட்சி வெற்றி பெறும் என்றும் சிலரால் பரப்பப்பட்டு வந்தது. ஆனால், விஜய்க்கு எதிராக தேர்தல் முடிவுகள் வந்தால், அந்த பிஞ்சு குழந்தைகளால் தாங்கி கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யின் தோல்வி குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடும் என்பதாலும், பெற்றோர்கள் தேர்தல் முடிவு நாளின் போது சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் பலரும் அட்வைஸ் செய்து வந்தனர். ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் கூட இது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், விஜய் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆணையம் தனது பரிந்துரையை வைத்துள்ளது.
விஜய் மீது சட்ட நடவடிக்கை?
இதில், "தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் மற்றும் அவரது பிரச்சார குழுவினர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் அதாவது JJ Act, 2015 இன் பிரிவு 70 மற்றும் 8-ன் கீழ், டிஜிபி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விஜய் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குழந்தைகள் நல ஆணையம் தனது பரிந்துரையை வைத்துள்ளது.
எனவே, JJ act சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் விஜய் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதால் இந்த விவகாரம் விஜய்க்கு புதிய தலைவலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications