"மிதக்கும் நகரம், ஹோட்டல், ஏர்போர்ட்".. உலக அளவில் கடலில் உள்ள கட்டுமானங்கள் என்னென்ன?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் பேனா சின்னம் வைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர், பாஜக மற்றும் அதிமுகவினர் எதிர்க்கிறார்கள். சரி உலகில் கடலுக்குள் எங்கேயுமே கட்டுமானங்கள் இருக்கின்றன, உலக அளவில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள பல கட்டுமானங்கள் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
உலகின் மிக முக்கியமான விமான நிலையம் அமைந்துள்ள நகரம் என்றால் அது துபாய் தான். உலகின் பல்வேறு கோடீஸ்வரர்கள் முதலீடு செய்துள்ள இந்த துபாய் நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டுமானங்கள் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகின்றன.
இங்கே செயற்கையாக கடலுக்குள் பாம் ஜூமேரா என்ற செயற்கை நகரம் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் பத்து மீட்டர் ஆழத்திற்கு மணல் கொட்டப்பட்டு அந்தப் பகுதிகளை மேடாக்கி தீவுக் கூட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் பணக்காரர்கள் பலருக்கும் இங்கே வீடுகள் இருக்கிறது. அம்பானிக்கு கூட இங்கு வீடு இருப்பதாக சொல்லப்படுகிறது.

துபாய் செயற்கை தீவு
சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த தீவை பார்த்தால் பெரிய பேரீட்சை மரம் இருப்பதைப் போன்ற வடிவில் இருக்கும். அதனால் தான் இந்தத் தீவுக்கு பேரிட்சை என்பதை குறிக்கும பாம் என பெயரிட்டுள்ளார்கள். எப்படி அமைக்கப்பட்டுள்ளது பாம் ஜூமேரா தீவு. இது கரையில் இருந்து கடலுக்கு ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை அமைத்து கட்டடங்கள் இங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக நான்காயிரம் வீடுகளும், ஒரு மிகப்பெரிய ரிசார்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. 2001-ல் வேலையைத் தொடங்கி 2009 இல் முடித்து இருக்கிறார்கள். அப்போதே மக்களும் குடியேறி வசித்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் இடமாக இந்த பாம் ஜுமேரா செயற்கை தீவு உள்ளது.

கன்சாய் விமான நிலையம்
ஜப்பான் நாடு சர்வதேச விமான நிலையத்தை கடலில் அமைத்துள்ளது. அங்குள்ள கன்சாய் விமான நிலையம் உலகிலேயே கடலில் அமைக்கப்பட்ட முதல் விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றி கல் மற்றும் மணலை நிரப்பக் கூடிய கட்டுமானப் பணிகள் 1987ஆம் ஆண்டு நடந்துள்ளது. இதற்காக மூன்று மலைக் குன்றுகளைத் தகர்த்து கல்லை எடுத்து வந்து அமைத்துள்ளது ஜப்பான். சுமார் 4.5 கிலோ மீட்டர் நீளமும், 2.5 கிலோ மீட்டர் அகலமும் கொண்டதாக உருவானது இந்த விமான நிலையம். பணிகள் முடிந்து 1994 இல் விமான நிலையம் திறக்கப்பட்டது.

சுவீடன் சுரங்கம்!
சுவீடனுக்கும் டென்மார்க்குக்கும் நடுவில் கடல் இருக்கும் நிலையில், கடலுக்கு நடுவே ஒரு பாலத்தையும் சுரங்கத்தையும் அமைத்து இரண்டு நாடுகளும் இணைந்துள்ளன. சுவீடனும் டென்மார்க்கும் பெபரகாம் பகுதியில் தங்களது எல்லைகளைப் பிரித்து உள்ளனர். அதே நேரத்தில் இரு தரப்பு வணிக நோக்கத்திற்காக அந்தப் பகுதியில் கடல் வழி போக்குவரத்து இருந்து வந்தது. பெரும் கப்பல்கள் அடிக்கடி போய் விட்டு வந்ததினால் படகு போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக பாலம் வழியாக இரண்டு எல்லையையும் இணைக்க விரும்பின இருநாடுகளும்.
நீண்ட ஆய்வுக்கு பின்னர் ஒரு பகுதியை பாலமாகவும். மறுபகுதியை சுரங்கமாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டது., இரண்டு பகுதியையும் செயற்கை தீவு அமைத்து இணைக்கலாம் அப்படி என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் செயற்கைத் தீவு அமைத்து சுரங்கத்தைக் கொண்டு வந்தால் கப்பல் போக்குவரத்து தடைபடாது என்று திட்டமிட்டு உருவானதுதான் பெபரகாம்.

துபாய் ஹோட்டல்
துபாயில் கடலில் ஒரு செயற்கைத் தீவு உருவாக்கப்பட்டு குர்ஜல் ஹாரோ என்ற ஹோட்டல் கட்டப்பட்டிருக்கிறது. துபாயைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் நிறுவனம். வித்தியாசமான வடிவமைப்பில் ஒரு ஹோட்டலைக் கட்டவேண்டும் என்று முடிவு செய்தது. அதற்கென்று ஆர்டிக்டெத் என்பவரை அணுகியது, அவர் தான் சுமேரா கடற்பகுதியில் உள்ள செயற்கைத் தீவில் ஈபிள் டவர் போலவும், சிட்டி போலவும் உருவாக்கியுள்ளார்- துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இந்த ஹோட்டல் இருக்கிறது.

கடலில் தேவாலயம்!
தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடானா மோட்டோரினிக்கோவில் கொட்டோர் என்ற நகரில் கடலில் தேவாலயம் பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளது. பாறைகளை உடைத்து கடலில் வீசி திட்டாக மாற்றி அங்கு தேவாலயமும் அருங்காட்சியமும் கட்டப்பட்டுள்ளது. இப்போது மக்கள் பாலத்தின் வழியாகவும் படகு வழியாகவும் அந்த ஆலயத்திற்கும் அருங்காட்சியகத்துக்கும் போய் வருகிறார்கள்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications