அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியல்.. "மடியில் கனமில்லை - வழியில் பயம் இல்லை" அமைச்சர் ரகுபதி
சென்னை: திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டால் வெளியிடட்டும்.. எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை வெளியிடும் பட்டியலை பார்ப்பதற்காக பெரிய திரையும் வைக்கப்படவுள்ளது.

அதில் முழு விவரமும் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர். நேரடி பத்திரிகையாளர் சந்திப்பு எதுவும் இல்லையென்றாலும் ஊழல் பட்டியலை வெளியிட்ட பிறகு பெரிய திரையில் அண்ணாமலையின் பேச்சு ஒளிபரப்பப் படும் என்று சொல்லப்படுகிறது. திமுகவினரை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் அண்ணாமலையின் இந்த பேச்சு காரசாரமாக இருக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில், அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியல் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரகுபதி கூறுகையில், " அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை . எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயம் இல்லை. பட்டியலை வெளியிட்டால் வெளியிடட்டும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் துணை வேந்தர் மசோதாக்கள் உள்பட 11 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications