பெண்ணை அப்படி டார்கெட் பண்ணாதீங்க.. சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி.. சாய்னா பரபர பதில்
சென்னை: சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி, ஒரு பெண்ணை யாரும் டார்கெட் செய்து தாக்கி பேச கூடாது என்று பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறைக்கப்பாடுகளால் பஞ்சாபில் பிரதமர் மோடியின் கான்வாய் முடக்கப்பட்டது குறித்து சாய்னா நேவால் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்து இருந்தார். சாய்னா தெரிவித்த கருத்தில், ஒரு நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நாட்டை எப்படி பாதுகாப்பான நாடு என்று சொல்ல முடியும். பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சாய்னாவின் இந்த ட்விட் வைரல் ஆன நிலையில் அதை ஷேர் செய்து நடிகர் சித்தார்த் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து இருந்தார்

பாலியல்
பாலியல் ரீதியாக மோசமான கருத்து வரும்படி இரட்டை அர்த்தத்துடன் சாய்னாவை சித்தார்த் கிண்டல் செய்து இருந்தார். இவரின் கருத்துக்கு இந்திய மகளிர் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தேசிய அளவில் பெரிய சர்ச்சையானது. பல தரப்பில் இருந்தும் சித்தார்த்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இவருக்கு எதிராக இந்திய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபியிடம் புகாரும் அளித்தது.

சாய்னா எதிர்ப்பு
சித்தார்த்தின் இந்த கருத்துக்கு சாய்னாவும் கண்டனம் தெரிவித்து இருந்தார். சித்தார்த் இப்படி பேசி இருக்க கூடாது. அவர் இன்னும் சிறப்பான வார்த்தைகளை பயன்படுத்தி முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். நம்முடைய நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் யாருக்கு பாதுகாப்பு இருக்கும். சித்தார்த்தை ஒரு நடிகராக எனக்கு பிடிக்கும் . ஆனால் அவர் அப்படி பேசி இருக்க கூடாது.

சாய்னா சித்தார்த்
அவர் பேசியது தவறு. அவர் ஏன் அப்படி பேசினார் என்று தெரியவில்லை என்று சாய்னா குறிப்பிட்டார். இதையடுத்து இந்த விவகாரம் பெரிதானதால் சித்தார்த் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். சித்தார்த் வெளியிட்ட மன்னிப்பு கடிதத்தில், நான் தவறாக பகிர்ந்த ஜோக்கிற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அதற்காக நான் கூறிய வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது.

சித்தார்த் மன்னிப்பு
சரியான கருத்தை பேசாத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன். எனது வார்த்தைகளை நான் சரியாக எடுத்துரைக்கவில்லை. எந்த தரக்குறைவான எண்ணத்தோடும் நான் பேசவில்லை. நாம் இந்த பிரச்னையை முடித்து கடந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதுமே என்னுடைய சாம்பியன் தான் என்று சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டு சித்தார்த் போஸ்ட் செய்து இருந்தார்.

சாய்னா விளக்கம்
இந்த நிலையில் சித்தார்த் மன்னிப்பு கேட்டதற்கு தற்போது சாய்னா நேவால் பதில் அளித்துள்ளார். அதில், சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி. அவர் முதலில் என்னை பற்றி எதோ சொன்னார். இப்போது மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அவர் பேசியது ஏன் வைரல் ஆனது என்று கூட தெரியவில்லை. என்னுடைய பெயர் இணையத்தில் ஏன் டிரெண்ட் ஆனது என்றும் கூட தெரியவில்லை. எனக்கு அதை பார்க்கவே ஆச்சர்யமாக இருந்தது.
Recommended Video

சித்தார்த் கருத்து சாய்னா
ஒரு பெண்ணை நீங்கள் அப்படி டார்கெட் செய்ய கூடாது. இப்போது ஓகே.. நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் என்னுடைய இடத்தில் சந்தோசமாக இருக்கிறேன். கடவுள் சித்தார்த்தை ஆசிர்வதிக்க வேண்டும். நான் இதை பற்றி எதுவும் நினைக்கவில்லை, என்று சாய்னா நேவால் விளக்கம் அளித்துள்ளார். சித்தார்த் முன்வந்து மன்னிப்பு கேட்ட நிலையில்.. அவர் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.. கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும் என்று சாய்னா பெருந்தன்மையோடு கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications