எல்ஐசி நிறுவனமே கொடுத்த மிகப் பெரிய அலர்ட்.. பாலிசி எடுக்க போறீங்களா.. இதை பாருங்க
சென்னை: பாலிசி தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, பாலிசிதாரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எல்ஐசி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
புதிய ஜீவன் சாந்தி, நிவேஷ் பிளஸ் (திட்டம் எண். 849), இன்டெக்ஸ் பிளஸ் (திட்டம் எண். 873), SIIP (திட்டம் எண். 852), ஜீவன் உத்சவ் (திட்டம் எண். 871), ஜீவன் உமாங் (திட்டம் எண். 945), பீமா ஜோதி (திட்டம் எண். 860) உள்பட ஏராளமான திட்டங்கள் எல்ஐசியில் இருக்கிறது. எல்ஐசியில் முதலீடு செய்வோர், திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்த பின்னர் முடிவெடுக்க வேண்டும்.

அதேநேரம் எல்ஐசி தொடர்பாக சில நேரங்களில் தவறான செய்திகள் அடிக்கடி பரவி வருகின்றன. அந்த வகையில் எல்.ஐ.சி. நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாற்றாக, விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறுவிதமாக பெறுவதற்கு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் உண்மை இல்லை என எல்ஐசி அறிவித்துள்ளது. மேலும் பாலிசி தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, பாலிசிதாரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எல்ஐசி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "எல்.ஐ.சி. பாலிசிதாரர்களின் பாலிசிகளை, எல்.ஐ.சி. நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாற்றாக, விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறுவிதமாக பெறுவதற்கு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சமீபத்திய செய்திக்கட்டுரைகள் வாயிலாக அறிகிறோம்.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு அத்தகைய நிறுவனங்களுடனோ அல்லது அத்தகைய நிறுவனங்களின் சேவைகளுடனோ எந்தவித தொடர்பு இல்லை. இதுதொடர்பாக, முன்னாள் எல்.ஐ.சி. அதிகாரிகள், ஊழியர்களின் அறிக்கை, அவர்களுடைய சொந்த கருத்துகள்தான். இதற்கு எல்.ஐ.சி. நிறுவனம் எந்தவித பொறுப்புகளையும் ஏற்காது. எல்.ஐ.சி. பாலிசிகள் விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் ஆகியவை காப்பீட்டு சட்டம் (1938)-ன்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது அமலில் உள்ள சட்டங்களின்படி, மேற்கண்டவாறு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை, அவை பாலிசிதாரர் நலன் சார்ந்தது அல்ல, பொது நலனுக்கு உகந்தது அல்ல, பாலிசிகளை வர்த்தகம் செய்யும் நோக்கிலானது ஆகிய காரணங்களுக்காக எல்.ஐ.சி. நிறுவனம் நிராகரிக்கலாம். எனவே, பாலிசிதாரர்கள் இதுதொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு, முழு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இதுதொடர்பான முடிவுகள், பாலிசியின் ஆயுள் காப்பீட்டு பலன்கள் மற்றும் பாலிசிதாரரின் நிதி பாதுகாப்பை பாதிக்கலாம். எந்த ஒரு முடிவை செயல்படுத்துவதற்கு முன்பு, எங்கள் கிளைகளில் உள்ள எல்.ஐ.சி. அதிகாரிகளுடன் தயவு செய்து கலந்தாலோசிக்க வேண்டும். எல்.ஜ.சி. நிறுவனம் வெளிப்படைத்தன்மை மற்றும் பாலிசிதாரர்களின் நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications